ETV Bharat / city

சென்னையில் மாணவர்கள் மோதலை தடுக்க வாட்ஸ்அப் குழு அமைப்பு!

author img

By

Published : Sep 8, 2021, 6:38 AM IST

சென்னையில் மாணவர்களுக்கு இடையே ஏற்படும் மோதலை முற்றிலுமாக ஒழிக்க வாட்ஸ் அப் குழு ஒன்று அமைத்து அதில் காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தகராறு செய்யும் மாணவர்களை பிடிக்க நடவடிக்கை
தகராறு செய்யும் மாணவர்களை பிடிக்க நடவடிக்கை

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ரூட்டு தல என்ற பெயரில் பேருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு, மோதலில் ஈடுபடுவது வழக்கமான நிகழ்வாகி விட்டது.

இதனைத் தடுப்பதற்காக சென்னை காவல் துறை, தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை மீறியும் சில கல்லூரி மாணவர்கள் பேருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருவது காவல் துறைக்கு பெரும் தலைவலியே.

குறிப்பாக கரோனா ஊரடங்கிற்கு பிறகு கடந்த 1ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன. பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கல்லூரி, மாநில கல்லூரியில் சில மாணவர்கள் பேருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் தினமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் மீறி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஊர்வலமாக வந்து கல்லூரி வளாகத்திலுள்ள சிலைக்கு மாலையிட்டது தொடர்பாக 200 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பேருந்தில் ரகளையில் ஈடுபட்டதால் எட்டு மாணவர்களை கைது செய்து எழுதி வாங்கி கொண்டு ஜாமீனில் விடுவித்தனர்.

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

இதனையடுத்து நியூ கல்லூரி, மாநில கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கல்லூரி உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்களிடம் காவல் துறையினர் ஆலோசனை நடத்தி, பேருந்து கொண்டாட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் பட்டியல் கேட்டு வாங்கியுள்ளனர். மேலும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆலோசனையும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் ரூட் தல பிரச்சினையை முற்றிலுமாக ஒழிக்க சென்னை காவல் துறையினர் புதிய யுக்தியை கையிலெடுத்துள்ளனர். குறிப்பாக பேருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு காவல் துறையினரிடம் சிக்கிய மாணவர்களை வைத்து முதற்கட்டமாக அந்தந்த காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையில் "வாட்ஸ் அப் குழு" தொடங்க காவல்துறை முடிவு செய்தது.

முதற்கட்டமாக பேருந்தில் ரகளையில் ஈடுபட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான 50 பேரை வைத்து டி.பி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் வாட்ஸ் அப் குழு ஒன்று தொடங்கப்பட்டது.

வாட்ஸ் அப் குழுவில் சோதனை

இந்தக் குழு மூலமாக பேருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட மாணவர்களை தூண்டும் மாணவர்கள் யார் எனவும் ஒரு சில மாணவர்கள் செய்யும் தவறினால் சில நல்ல மாணவர்கள் சிக்குவதால் அதனைக் கண்டுபிடிக்க உதவியாக இந்த வாட்ஸ் அப் குரூப் இருக்கும் என காவல் துறை நம்பியுள்ளனர்.

மேலும் வாட்ஸ் அப் குழு மூலமாக கல்லூரி மாணவர்களை நல்வழிக்கு கொண்டு செல்லும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி பொருளாதாரத்தில் பின்தங்கிய சில மாணவர்கள் படிப்பு செலவுக்காக கஷ்டபடும் போது இந்த குழு மூலமாக அறிந்து அந்த மாணவருக்கு உதவி புரியவும் குழு செயல்படுவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பேருந்தில் ஆபத்தான முறையில் பயணித்த மாணவர்கள்

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ரூட்டு தல என்ற பெயரில் பேருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு, மோதலில் ஈடுபடுவது வழக்கமான நிகழ்வாகி விட்டது.

இதனைத் தடுப்பதற்காக சென்னை காவல் துறை, தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை மீறியும் சில கல்லூரி மாணவர்கள் பேருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருவது காவல் துறைக்கு பெரும் தலைவலியே.

குறிப்பாக கரோனா ஊரடங்கிற்கு பிறகு கடந்த 1ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன. பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கல்லூரி, மாநில கல்லூரியில் சில மாணவர்கள் பேருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் தினமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் மீறி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஊர்வலமாக வந்து கல்லூரி வளாகத்திலுள்ள சிலைக்கு மாலையிட்டது தொடர்பாக 200 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பேருந்தில் ரகளையில் ஈடுபட்டதால் எட்டு மாணவர்களை கைது செய்து எழுதி வாங்கி கொண்டு ஜாமீனில் விடுவித்தனர்.

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

இதனையடுத்து நியூ கல்லூரி, மாநில கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கல்லூரி உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்களிடம் காவல் துறையினர் ஆலோசனை நடத்தி, பேருந்து கொண்டாட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் பட்டியல் கேட்டு வாங்கியுள்ளனர். மேலும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆலோசனையும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் ரூட் தல பிரச்சினையை முற்றிலுமாக ஒழிக்க சென்னை காவல் துறையினர் புதிய யுக்தியை கையிலெடுத்துள்ளனர். குறிப்பாக பேருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு காவல் துறையினரிடம் சிக்கிய மாணவர்களை வைத்து முதற்கட்டமாக அந்தந்த காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையில் "வாட்ஸ் அப் குழு" தொடங்க காவல்துறை முடிவு செய்தது.

முதற்கட்டமாக பேருந்தில் ரகளையில் ஈடுபட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான 50 பேரை வைத்து டி.பி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் வாட்ஸ் அப் குழு ஒன்று தொடங்கப்பட்டது.

வாட்ஸ் அப் குழுவில் சோதனை

இந்தக் குழு மூலமாக பேருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட மாணவர்களை தூண்டும் மாணவர்கள் யார் எனவும் ஒரு சில மாணவர்கள் செய்யும் தவறினால் சில நல்ல மாணவர்கள் சிக்குவதால் அதனைக் கண்டுபிடிக்க உதவியாக இந்த வாட்ஸ் அப் குரூப் இருக்கும் என காவல் துறை நம்பியுள்ளனர்.

மேலும் வாட்ஸ் அப் குழு மூலமாக கல்லூரி மாணவர்களை நல்வழிக்கு கொண்டு செல்லும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி பொருளாதாரத்தில் பின்தங்கிய சில மாணவர்கள் படிப்பு செலவுக்காக கஷ்டபடும் போது இந்த குழு மூலமாக அறிந்து அந்த மாணவருக்கு உதவி புரியவும் குழு செயல்படுவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பேருந்தில் ஆபத்தான முறையில் பயணித்த மாணவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.