தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சியும் இணைந்து போட்டியிடுகிறது. நேற்றிரவு (மார்ச் 10) இருக்கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்படிக்கை கையெழுத்தாகி உள்ளது.
![AIADMK alliance, Perambur Constituency, AIADMK Double leaves, சென்னை, Chennai latest, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி பெரம்பூர் தொகுதியில் போட்டி, என்.ஆர்.தனபாலன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, பெரம்பூர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/perunthalaivar-makkal-katchi-alliance-seat-sharing---1032021_1003newsroom_1615395096_1039.jpg)
இதில் பெருந்தலைவர் மக்கள் கட்சி பெரம்பூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும்; பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பாக என்.ஆர்.தனபாலனும் தொகுதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
இதையும் படிங்க: பல்லடம் அதிமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு : சாலை மறியல்