தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் 5, 6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்குத் திறனறிவு தேர்வு நடத்தப்படுகின்றது. இந்த தேர்வு கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் ஜனவரி 5ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.
இத்தேர்வில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியர் நுழைவு கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். இந்த கணிதத் திறனறிவுத் தேர்வு சுமார் 90 நிமிடங்கள் நடைபெறும். சிறந்த மாணவருக்கு முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 2000 ரூபாயும், மூன்றாம் பரிசாக ரூபாய் ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி: உயர்மட்ட அமைச்சர்கள் குழு அமைப்பு!
ஒரே பள்ளியில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வில் கலந்துகொண்டால், அந்தந்த பள்ளியிலேயே இந்த தேர்வை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் நடத்தும் என்று கூறப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான நுழைவு கட்டணத்தை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் பெயரில் எடுக்கப்பட்ட வரைவு காசோலையை பள்ளிகள். இந்த மாதம் 20ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.