ETV Bharat / city

’வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கும் உதவுக’ - அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு! - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாட்டில் குடும்ப அட்டைகள் இல்லாத வெளிமாநிலத்தவர்களையும் கணக்கெடுத்து அவர்களுக்கும் உதவிகள் வழங்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

rice
rice
author img

By

Published : Apr 30, 2020, 12:27 PM IST

கரோனா தீநுண்மி பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், தினக் கூலிகள், வெளிமாநிலத்தவர்கள், புலம்பெயர்ந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு தமிழ்நாட்டில் குடும்ப அட்டைகள் இருக்காது என்பதால் அவர்களின் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அடையாள அட்டைகளின் அடிப்படையில் உணவு தானியங்களை விநியோகிக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி, அருள் அரசு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் அமர்வு முன்பு காணொலிக் காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழ்நாட்டில் குடும்ப அட்டை இல்லாத நபர்களை அரசு உடனடியாகக் கணக்கெடுத்து, அவர்களுக்கும் உதவி வழங்குவது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மே 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ஆதரவற்றோருக்கு உதவிய காவல் துறை

கரோனா தீநுண்மி பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், தினக் கூலிகள், வெளிமாநிலத்தவர்கள், புலம்பெயர்ந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு தமிழ்நாட்டில் குடும்ப அட்டைகள் இருக்காது என்பதால் அவர்களின் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அடையாள அட்டைகளின் அடிப்படையில் உணவு தானியங்களை விநியோகிக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி, அருள் அரசு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் அமர்வு முன்பு காணொலிக் காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழ்நாட்டில் குடும்ப அட்டை இல்லாத நபர்களை அரசு உடனடியாகக் கணக்கெடுத்து, அவர்களுக்கும் உதவி வழங்குவது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மே 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ஆதரவற்றோருக்கு உதவிய காவல் துறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.