ETV Bharat / city

ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை - IIT student suicide case

சென்னை: கேரள மாணவி ஃபாத்திமாவின் தற்கொலைக்குக் காரணமான ஐஐடி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

IIT student suicide case
author img

By

Published : Nov 14, 2019, 9:41 PM IST

சென்னை ஐஐடியில் முதுகலை முதலாமாண்டு படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீப், கடந்த நவம்பர் 8ஆம் தேதி தான் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். பேராசிரியர்கள் சிலர் அளித்த மத ரீதியான துன்புறுத்தலால்தான் தற்கொலை முடிவுக்கு வந்ததாக ஃபாத்திமா தன் செல்ஃபோனில் குறிப்பு எழுதி வைத்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஐஐடி பேராசிரியர்களின் மத பாகுபாட்டைக் கண்டித்து பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை ஐஐடி வளாகத்தின் நுழைவு வாயிலில் இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று போராட்டம் நடத்தினர்.

அப்போது பேசிய அச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன், மத்தியப் பல்கலைக்கழகங்களில் தலித் மற்றும் இசுலாமிய மாணவர்கள் மீது ஆர்எஸ்எஸ் சிந்தனையுள்ள ஆசிரியர்கள் மூலமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அரசு ரோஹித் வெமுலாவை கொலை செய்தது போல், சென்னை ஐஐடியில் மாணவி ஃபாத்திமாவையும் படுகொலை செய்துள்ளது என்றார்.

IIT student suicide case

தொடர்ந்து பேசிய அவர், மாணவி ஃபாத்திமா கடந்த 28 நாட்களுக்கும் மேலாக பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனால் உளவியல் ரீதியாக தாக்கப்பட்டுள்ளார் என்றும், அதன் விளைவாகவே தற்கொலை செய்துகொண்டார் எனவும் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மத ரீதியான தாக்குதல்கள் அதிகளவில் நடப்பதால், தமிழ்நாடுதான் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பியதாக ஃபாத்திமாவின் தாயார் தெரிவித்துள்ளதைக் குறிப்பிட்ட அவர், அந்த தாயாரின் நம்பிக்கையை பாஜக அரசும், ஆர்எஸ்எஸ் சிந்தனைவாதிகளும் உடைத்தெறிந்து விட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.

சென்னை ஐஐடியில் முதுகலை முதலாமாண்டு படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீப், கடந்த நவம்பர் 8ஆம் தேதி தான் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். பேராசிரியர்கள் சிலர் அளித்த மத ரீதியான துன்புறுத்தலால்தான் தற்கொலை முடிவுக்கு வந்ததாக ஃபாத்திமா தன் செல்ஃபோனில் குறிப்பு எழுதி வைத்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஐஐடி பேராசிரியர்களின் மத பாகுபாட்டைக் கண்டித்து பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை ஐஐடி வளாகத்தின் நுழைவு வாயிலில் இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று போராட்டம் நடத்தினர்.

அப்போது பேசிய அச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன், மத்தியப் பல்கலைக்கழகங்களில் தலித் மற்றும் இசுலாமிய மாணவர்கள் மீது ஆர்எஸ்எஸ் சிந்தனையுள்ள ஆசிரியர்கள் மூலமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அரசு ரோஹித் வெமுலாவை கொலை செய்தது போல், சென்னை ஐஐடியில் மாணவி ஃபாத்திமாவையும் படுகொலை செய்துள்ளது என்றார்.

IIT student suicide case

தொடர்ந்து பேசிய அவர், மாணவி ஃபாத்திமா கடந்த 28 நாட்களுக்கும் மேலாக பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனால் உளவியல் ரீதியாக தாக்கப்பட்டுள்ளார் என்றும், அதன் விளைவாகவே தற்கொலை செய்துகொண்டார் எனவும் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மத ரீதியான தாக்குதல்கள் அதிகளவில் நடப்பதால், தமிழ்நாடுதான் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பியதாக ஃபாத்திமாவின் தாயார் தெரிவித்துள்ளதைக் குறிப்பிட்ட அவர், அந்த தாயாரின் நம்பிக்கையை பாஜக அரசும், ஆர்எஸ்எஸ் சிந்தனைவாதிகளும் உடைத்தெறிந்து விட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.

Intro:Body:சென்னை ஐஐடி யில் முதுகலை படிப்பில் முதலாமாண்டு படித்துவந்த கேரளாவை சேர்ந்த ஃபாத்திமா லத்தீப் நவம்பர் 8 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியர் அளித்த மத ரீதியான தாக்குதல் காரணமாகத்தான் இந்த முடிவுக்கு வந்ததாக தன் மகள் செல்போனில் குறிப்பு எழுதி வைத்துள்ளதாக அவரின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். ஆசிராயரின் மத பாகுபாட்டை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடித்தி வருகினேறன. அந்த வகையில் சென்னை ஐஐடி வளாகத்தின் நுழைவு வாயிலில் இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று போராட்டம் நடத்தினர்.

அப்போது பேசிய அச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன், " மத்திய பாசிச பா.ஜ.க. அரசாங்கம் புதிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தி கல்வி நிலையங்களை சிதைத்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாக மத்திய பல்கலைக்கழகங்களில் தலித் மற்றும் இசுலாமிய மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். சிந்தனையுள்ள ஆசிரியர்கள் மூலமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த அரசு ரோஹித் வெமுலாவை கொலை செய்தது போல் சென்னை ஐஐடி யில் மாணவி ஃபாத்திமாவை கல்வி நிலைய வளாக படுகொலை செய்துள்ளது.

குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் இன்றைய நாளில் கல்வி நிலைய வளாகங்களில் குழந்தைகள் கொலை செய்யப்படுவது மிகவும் வேதனையை அளிக்கிறது. சென்னை ஐஐடி யில் கடந்த ஒரு வருடத்தில் ஒரு பேராசிராயை உள்பட ஐந்து பேர் மரணமடைந்துள்ளார். அத்தனை மரணங்களும் எந்தவித ஆய்வுக்கும் உட்படுத்தப்படாமல் முறையான விசாரணை நடத்தாமல் முடித்து வைக்கப்பட்டுளள்து.

மாணவி ஃபாத்திமா 28 நாள்களுக்கு மேலாக இங்கிருக்ககூடிய ஆசிரியர் சுதர்சன் பத்மநாபனால் உளவியல் ரீதியாக தாக்கப்பட்டுள்ளார். அதன் விளைவாக மாணவி மரணமடைந்துள்ளார். இதை அவரே குறிப்பு எழுதி வைத்துள்ளார்.

ஆகவே இந்த வளாக படுகொலையை 306 தற்கொலைக்கு தூண்டிய பிரிவில் காவர்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஐஐடி நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டின் தலைநகரில் கல்வி நிலையை வளாங்கள் கொலை கூடாரமாக மாறுவதை தடுக்க தமிழ்நடு அரசாங்கம் உள்ளிட்டு ஒரு குழுவை அமைக்க வேண்டும். அதேபோல் தலித் இசுலாமிய மாணவர்கள் மீது வைக்கப்படும் பாகுபாட்டை தடுக்கவும் ஒரு குழுவை அமைக்க வேண்டும்.

இந்தியாவில் மத ரீதியான தாக்குதல்கள் அதிகளவில் நடக்கிறது தமிழ்நாடுதான் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பியதாக ஃபாத்திமாவின் தாயார் தெரிவித்துள்ளார். அவரின் நம்பிக்கையை பா.ஜ.க. பாசிச அரசாங்ஙமும் ஆர்.எஸ்.எஸ். சிந்தனைவாதிகளும் உடைத்தெறிந்து விட்டனர். இந்த அவப்பெயரை தொடைக்க தமிழக முதல்வர் வாய்திறந்து பதில்கூற வேண்டும்.

கல்வி நிலையங்களில் தொடர் தற்கொலைகள் நடந்து வருகிறது. தப்பு செச்ச்தவர்கள் தொடர்ந்து தப்பித்து வருகின்றனர். தமிழக அரசாங்கம் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.