ETV Bharat / city

கோயில்களுக்குச் சேர வேண்டிய குத்தகை, வாடகையை உடனே வசூலிக்க உத்தரவு - இந்துசமய அறநிலைத் துறை

திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளின் குத்தகை, வாடகை நிலுவைத் தொகையை உடனடியாக வசூலிக்க திருக்கோயில் அலுவலர்களுக்கு இந்துசமய அறநிலைத் துறை உத்தரவிட்டுள்ளது.

Hindu Religious and Charitable Endowments
Hindu Religious and Charitable Endowments
author img

By

Published : Jan 6, 2022, 3:42 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான திருக்கோயில்களில் அன்றாட பூஜைகள், திருவிழாக்கள் நடத்திடவும், அவற்றைப் பராமரிக்கவும், பண்டையகால மன்னர்கள் முதற்கொண்டு அனைத்துத் தரப்பினரும் இன்றைய தேதி வரை, அசையும், அசையா சொத்துகளை தானமாக வழங்கிவருகிறார்கள்.

இத்தகைய சொத்துகளை முறையாகப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் அவற்றின் மூலம் வருவாயினைப் பெருக்கி, திருக்கோயில்களைப் பராமரிப்பதும், புனரமைப்பதும் இத்துறையின் முக்கியப் பணியாகும்.

திருக்கோயில்களுக்குச் சொந்தமான அசையா சொத்துகள் குத்தகை / வாடகைக்கு விடப்பட்ட இடங்களிலிருந்து வரப்பெற வேண்டிய குத்தகை / வாடகைத் தொகையானது பல ஆண்டுகளாக வசூலிக்கப்படாமல் அதிக அளவில் நிலுவையில் உள்ளது.

குத்தகை / வாடகை நிலுவைத் தொகையினை 30 நாள்களுக்குள் செலுத்தப்பட வேண்டுமெனவும், அவ்வாறு செலுத்தப்படவில்லையெனில் வெளியேற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட திருக்கோயில் செயல் அலுவலர், நிர்வாகி, பரம்பரை அறங்காவலர் ஆகியோர் பதிவு அஞ்சல் ஒப்புதல் அட்டையுடன் அனுப்ப வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இந்துசமய அறநிலைத் துறை
இந்துசமய அறநிலைத் துறை

திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளில் சட்டப்பூர்வமான வாடகை ஒப்பந்தம் ஏதுமில்லாமலும், உரிய வாடகையினைச் செலுத்தாமலும், நிலுவைத் தொகையினைச் செலுத்த முன்வராத நபர்கள், ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்துவரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதை அறிந்து ஆக்கிரமிப்பு செய்திருந்த தனிநபர்கள் தானாக முன்வந்து திருக்கோயில் இடங்களை ஒப்படைத்துவருகிறார்கள். அதற்கான வாடகை நிலுவைத் தொகையினையும் செலுத்திவருகிறார்கள்.

இதேபோல் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ள திருக்கோயில் இடங்களை தாமாக முன்வந்து திருக்கோயிலில் ஒப்படைக்குமாறும், நிலுவைத் தொகையினை முறையாகச் செலுத்தி திருக்கோயில் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்புத் தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கிரிக்கெட் வீராங்கனை Chakda Xpress அனுஷ்கா!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான திருக்கோயில்களில் அன்றாட பூஜைகள், திருவிழாக்கள் நடத்திடவும், அவற்றைப் பராமரிக்கவும், பண்டையகால மன்னர்கள் முதற்கொண்டு அனைத்துத் தரப்பினரும் இன்றைய தேதி வரை, அசையும், அசையா சொத்துகளை தானமாக வழங்கிவருகிறார்கள்.

இத்தகைய சொத்துகளை முறையாகப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் அவற்றின் மூலம் வருவாயினைப் பெருக்கி, திருக்கோயில்களைப் பராமரிப்பதும், புனரமைப்பதும் இத்துறையின் முக்கியப் பணியாகும்.

திருக்கோயில்களுக்குச் சொந்தமான அசையா சொத்துகள் குத்தகை / வாடகைக்கு விடப்பட்ட இடங்களிலிருந்து வரப்பெற வேண்டிய குத்தகை / வாடகைத் தொகையானது பல ஆண்டுகளாக வசூலிக்கப்படாமல் அதிக அளவில் நிலுவையில் உள்ளது.

குத்தகை / வாடகை நிலுவைத் தொகையினை 30 நாள்களுக்குள் செலுத்தப்பட வேண்டுமெனவும், அவ்வாறு செலுத்தப்படவில்லையெனில் வெளியேற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட திருக்கோயில் செயல் அலுவலர், நிர்வாகி, பரம்பரை அறங்காவலர் ஆகியோர் பதிவு அஞ்சல் ஒப்புதல் அட்டையுடன் அனுப்ப வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இந்துசமய அறநிலைத் துறை
இந்துசமய அறநிலைத் துறை

திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளில் சட்டப்பூர்வமான வாடகை ஒப்பந்தம் ஏதுமில்லாமலும், உரிய வாடகையினைச் செலுத்தாமலும், நிலுவைத் தொகையினைச் செலுத்த முன்வராத நபர்கள், ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்துவரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதை அறிந்து ஆக்கிரமிப்பு செய்திருந்த தனிநபர்கள் தானாக முன்வந்து திருக்கோயில் இடங்களை ஒப்படைத்துவருகிறார்கள். அதற்கான வாடகை நிலுவைத் தொகையினையும் செலுத்திவருகிறார்கள்.

இதேபோல் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ள திருக்கோயில் இடங்களை தாமாக முன்வந்து திருக்கோயிலில் ஒப்படைக்குமாறும், நிலுவைத் தொகையினை முறையாகச் செலுத்தி திருக்கோயில் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்புத் தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கிரிக்கெட் வீராங்கனை Chakda Xpress அனுஷ்கா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.