ETV Bharat / city

10 ஆம் வகுப்புத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

சென்னை: கரோனா ஓரளவு கட்டுக்குள் வந்து, இயல்பு வாழ்க்கை திரும்பும்வரை பத்தாம் வகுப்புத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

author img

By

Published : May 12, 2020, 4:03 PM IST

stalin
stalin

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கரோனாவால் பீதியும் அச்சமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் இந்த அவசர அறிவிப்பு, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பதற்றத்தை மேலும் உருவாக்கவே செய்யும்.

வாரந்தோறும் பிரதமரே அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் கலந்தாலோசனை செய்து முடிவுகள் எடுக்கும் போது, இத்தேர்வுத் தேதிகளை யாரைக் கேட்டு தமிழ்நாடு அரசு முடிவு செய்கிறது? ஆசிரியர், பெற்றோர் சங்கப் பிரதிநிதிகளின் கருத்துக் கேட்டு, பரிசீலனை செய்யப்பட்டதா?

மேலும், சென்னையில் கரோனா பாதிப்பு குறையாமல், பெருகி வருவதால், தமிழ்நாட்டில் விமானம் மற்றும் இரயில் போக்குவரத்தை மே 31 ஆம் தேதி வரை அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமரிடம் முதலமைச்சர்ர் கோரிக்கை வைத்துள்ளார். மே 31 ஆம் தேதி வரை ரயில்கள் ஓடாது என்றால், போக்குவரத்து வசதிக்கு உத்தரவாதம் இன்றி, ஜூன் 1 ஆம் தேதி காலையில் மாணவர்கள் அனைவரும் தேர்வுக்கு எப்படி வருவார்கள்? மாணவர்கள் எத்தனை பேர் வெளியூர்களில் இருக்கிறார்கள் எனத் தெரியாது. இந்நிலையில் எதற்காக இத்தகைய குழப்பமான அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

எனவே, கரோனா ஓரளவு கட்டுக்குள் வந்து, மருத்துவ ரீதியான இயல்பு வாழ்க்கை திரும்பியதாக உறுதிப்படுத்திய பிறகு, தேர்வு நடத்துவதே சரியானது “ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் தொடக்கம்!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கரோனாவால் பீதியும் அச்சமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் இந்த அவசர அறிவிப்பு, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பதற்றத்தை மேலும் உருவாக்கவே செய்யும்.

வாரந்தோறும் பிரதமரே அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் கலந்தாலோசனை செய்து முடிவுகள் எடுக்கும் போது, இத்தேர்வுத் தேதிகளை யாரைக் கேட்டு தமிழ்நாடு அரசு முடிவு செய்கிறது? ஆசிரியர், பெற்றோர் சங்கப் பிரதிநிதிகளின் கருத்துக் கேட்டு, பரிசீலனை செய்யப்பட்டதா?

மேலும், சென்னையில் கரோனா பாதிப்பு குறையாமல், பெருகி வருவதால், தமிழ்நாட்டில் விமானம் மற்றும் இரயில் போக்குவரத்தை மே 31 ஆம் தேதி வரை அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமரிடம் முதலமைச்சர்ர் கோரிக்கை வைத்துள்ளார். மே 31 ஆம் தேதி வரை ரயில்கள் ஓடாது என்றால், போக்குவரத்து வசதிக்கு உத்தரவாதம் இன்றி, ஜூன் 1 ஆம் தேதி காலையில் மாணவர்கள் அனைவரும் தேர்வுக்கு எப்படி வருவார்கள்? மாணவர்கள் எத்தனை பேர் வெளியூர்களில் இருக்கிறார்கள் எனத் தெரியாது. இந்நிலையில் எதற்காக இத்தகைய குழப்பமான அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

எனவே, கரோனா ஓரளவு கட்டுக்குள் வந்து, மருத்துவ ரீதியான இயல்பு வாழ்க்கை திரும்பியதாக உறுதிப்படுத்திய பிறகு, தேர்வு நடத்துவதே சரியானது “ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.