ETV Bharat / city

பேருந்து நடத்துநரை கல்லால் தாக்கிய பள்ளி மாணவர்கள் - போலீஸ் விசாரணை

அரசுப் பேருந்தில் ஜன்னல் வழியாக ஏறிய மாணவர்களை தட்டிக் கேட்ட பேருந்து ஓட்டுநரை கல்லால் தாக்கிய பள்ளி மாணவர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author img

By

Published : Sep 30, 2021, 1:51 PM IST

பேருந்து நடத்துநரை கல்லால் தாக்கிய பள்ளி மாணவர்கள்
பேருந்து நடத்துநரை கல்லால் தாக்கிய பள்ளி மாணவர்கள்

சென்னை: அண்ணா சதுக்கம் முதல் பெரம்பூர் வரை செல்லக்கூடிய 29A பேருந்து நேற்று (செப்.29) மாலை பயணிகளுடன் ராஜா அண்ணாமலை சாலை பேருந்து நிலையத்திற்கு வந்தது. இதில், வியாசர்பாடியைச் சேர்ந்த சுரேஷ் குமார் (39) நடத்துநராக பணியாற்றினார்.

அப்போது அந்த பேருந்தின் ஜன்னல் வழியாக சுமார் 9 மாணவர்கள் ஏறி, பேருந்து படியில் நின்றுகொண்டு வந்தனர். இதனைக் கண்ட பேருந்து நடத்துநர் மாணவர்களை உள்ளே வருமாறு கேட்டுள்ளார். ஆனால், மாணவர்கள் கேட்காததால் பேருந்தை ஓரமாக நிறுத்தி, அவர்களை கீழே இறங்குமாறு நடத்துநர் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த இரண்டு மாணவர்கள், நடத்துனரின் மீது கல்லை வீசி தாக்கிவிட்டுத் தப்பிச்சென்றனர்.

பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் போராட்டம்

உடனே பாதிக்கப்பட்ட நடத்துநர், அந்த வழியாக வந்த மற்ற பேருந்து ஓட்டுநர்களிடம் நடந்தவற்றைத் தெரிவித்தார். பின்னர், பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் சுமார் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த இணை ஆணையர் ராஜேந்திரன், கீழ்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

மாணவர் மீது வழக்குப்பதிவு

இதனடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்று பேருந்துகளை எடுத்துச் சென்றனர். இதனை தொடர்ந்து நடத்துநர் மீது கல்லை எறிந்த விவகாரம் தொடர்பாக தாசபிரகாஷ் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி மாணவனை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

பேருந்து நடத்துநரை கல்லால் தாக்கிய பள்ளி மாணவர்கள்

விசாரணையில், நடத்துநர் மீது கல்லை எறிந்தது உறுதியானதால் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து தப்பிச் சென்ற மாணவர்கள் யார் என கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி: மதுரையில் பரபரப்பு

சென்னை: அண்ணா சதுக்கம் முதல் பெரம்பூர் வரை செல்லக்கூடிய 29A பேருந்து நேற்று (செப்.29) மாலை பயணிகளுடன் ராஜா அண்ணாமலை சாலை பேருந்து நிலையத்திற்கு வந்தது. இதில், வியாசர்பாடியைச் சேர்ந்த சுரேஷ் குமார் (39) நடத்துநராக பணியாற்றினார்.

அப்போது அந்த பேருந்தின் ஜன்னல் வழியாக சுமார் 9 மாணவர்கள் ஏறி, பேருந்து படியில் நின்றுகொண்டு வந்தனர். இதனைக் கண்ட பேருந்து நடத்துநர் மாணவர்களை உள்ளே வருமாறு கேட்டுள்ளார். ஆனால், மாணவர்கள் கேட்காததால் பேருந்தை ஓரமாக நிறுத்தி, அவர்களை கீழே இறங்குமாறு நடத்துநர் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த இரண்டு மாணவர்கள், நடத்துனரின் மீது கல்லை வீசி தாக்கிவிட்டுத் தப்பிச்சென்றனர்.

பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் போராட்டம்

உடனே பாதிக்கப்பட்ட நடத்துநர், அந்த வழியாக வந்த மற்ற பேருந்து ஓட்டுநர்களிடம் நடந்தவற்றைத் தெரிவித்தார். பின்னர், பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் சுமார் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த இணை ஆணையர் ராஜேந்திரன், கீழ்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

மாணவர் மீது வழக்குப்பதிவு

இதனடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்று பேருந்துகளை எடுத்துச் சென்றனர். இதனை தொடர்ந்து நடத்துநர் மீது கல்லை எறிந்த விவகாரம் தொடர்பாக தாசபிரகாஷ் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி மாணவனை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

பேருந்து நடத்துநரை கல்லால் தாக்கிய பள்ளி மாணவர்கள்

விசாரணையில், நடத்துநர் மீது கல்லை எறிந்தது உறுதியானதால் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து தப்பிச் சென்ற மாணவர்கள் யார் என கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி: மதுரையில் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.