ETV Bharat / city

'நடிகர் சித்தார்த்துக்கு கண்ணீர் அஞ்சலி'

author img

By

Published : Sep 3, 2021, 3:22 PM IST

நடிகர் சித்தார்த் உயிரிழந்து விட்டதாக நெட்டிசன் ஒருவர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பதிவிட்டிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Actor Siddharth
Actor Siddharth

பிரபல பாலிவுட் நடிகரும், பிக்பாஸ் வெற்றியாளுருமான சித்தார்த் சுக்லா நேற்று(செப்.2) காலை திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சித்தார்த் சுக்லா தொலைக்காட்சி தொடர்களிலும், பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துவந்தார்.

இவர் 2005ஆம் ஆண்டு உலகின் சிறந்த மாடல் என்ற பட்டத்தை பெற்றவர். இதையடுத்து 2019ஆம் ஆண்டு 'பிக்பாஸ்' சீசன் 13இல் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்.

அண்மைகாலமாக, வெப் தொடர்களிலும், தொலைகாட்சி தொடர்களிலும் நடித்து வந்த நிலையில், நேற்று திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவு பாலிவுட் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவிற்கு பாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நெட்டிசன் பதிவு
நெட்டிசன் பதிவு

இந்த நிலையில், நெட்டின் ஒருவர் தமிழ் நடிகர் சித்தார்த்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டுள்ளது. இதனைக் கண்ட சித்தார்த், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "என் மீது இணைய வழியாக வெறுப்பும், வன்முறையும் காட்டப்படுகிறது. இதில் எந்த விதத்தில் நாம் குறையப் போகிறோம்" எனத் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகராக இருப்பவர் சித்தார்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சித்தார்த் நடிப்பு தொழிலை மட்டுமின்றி அரசியலில் நிகழும் சூழல் குறித்து சமூக வலைதளங்களில் அடிக்கடி கருத்து தெரிவித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மரணமடைந்த பிக்பாஸ் பிரபலம் யார்?

பிரபல பாலிவுட் நடிகரும், பிக்பாஸ் வெற்றியாளுருமான சித்தார்த் சுக்லா நேற்று(செப்.2) காலை திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சித்தார்த் சுக்லா தொலைக்காட்சி தொடர்களிலும், பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துவந்தார்.

இவர் 2005ஆம் ஆண்டு உலகின் சிறந்த மாடல் என்ற பட்டத்தை பெற்றவர். இதையடுத்து 2019ஆம் ஆண்டு 'பிக்பாஸ்' சீசன் 13இல் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்.

அண்மைகாலமாக, வெப் தொடர்களிலும், தொலைகாட்சி தொடர்களிலும் நடித்து வந்த நிலையில், நேற்று திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவு பாலிவுட் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவிற்கு பாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நெட்டிசன் பதிவு
நெட்டிசன் பதிவு

இந்த நிலையில், நெட்டின் ஒருவர் தமிழ் நடிகர் சித்தார்த்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டுள்ளது. இதனைக் கண்ட சித்தார்த், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "என் மீது இணைய வழியாக வெறுப்பும், வன்முறையும் காட்டப்படுகிறது. இதில் எந்த விதத்தில் நாம் குறையப் போகிறோம்" எனத் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகராக இருப்பவர் சித்தார்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சித்தார்த் நடிப்பு தொழிலை மட்டுமின்றி அரசியலில் நிகழும் சூழல் குறித்து சமூக வலைதளங்களில் அடிக்கடி கருத்து தெரிவித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மரணமடைந்த பிக்பாஸ் பிரபலம் யார்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.