ETV Bharat / city

குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் குட்கா பறிமுதல்...

author img

By

Published : Oct 1, 2022, 12:57 PM IST

பூந்தமல்லி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள 3 டன் குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

குட்கா பறிமுதல்
குட்கா பறிமுதல்

குன்றத்தூர் பகுதியில் தாம்பரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஷாலினி, குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து காரில் வந்த கண்டிகையை சேர்ந்த சிராஜுதீன்(43), கூடுவாஞ்சேரியை சேர்ந்த மணிமாறன்(45), ஆகிய இருவரை கைது செய்து விசாரித்த போது, பூந்தமல்லி அடுத்த கண்ணபாளையம் அருகே உள்ள தனியார் குடோனில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.

மூன்று டன் குட்கா பறிமுதல்
மூன்று டன் குட்கா பறிமுதல்

பின்னர் குடோனை திறந்து பார்த்தபோது, அதில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டை, மூட்டையாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா வாகனம் மூலம் குன்றத்தூர் எடுத்து வந்து காட்சிப்படுத்தினார்கள்.

இதையடுத்து தாம்பரம் துணை கமிஷன் சிபி. சக்கரவர்த்தி பறிமுதல் செய்யப்பட்ட குட்காவை பார்வையிட்டார். இந்த சம்பவத்தில் குடோன் உரிமையாளர் லோகநாதன்(42), உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்த காவல்துறையினர் நான்கு கார்கள், இரண்டு மொபெட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் இவர்கள் குட்காவை மொத்தமாக எடுத்து வந்து குடோனில் பதுக்கி வைத்து அதிகாலை நான்கு மணி முதல் 8 மணிக்குள் சிறு, சிறு கடைகளுக்கு காரில் எடுத்து சென்று சப்ளை செய்து வந்ததும் காவல்துறையினரிடம் சிக்காமல் இருப்பதற்காக தினமும் ஒரு செல்போன், ஒரு சிம் கார்டு பயன்படுத்தி வந்தனர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கஞ்சா சோதனையில் சிக்கிய ரூ.1.75 கோடி - 2 பேரிடம் விசாரணை

குன்றத்தூர் பகுதியில் தாம்பரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஷாலினி, குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து காரில் வந்த கண்டிகையை சேர்ந்த சிராஜுதீன்(43), கூடுவாஞ்சேரியை சேர்ந்த மணிமாறன்(45), ஆகிய இருவரை கைது செய்து விசாரித்த போது, பூந்தமல்லி அடுத்த கண்ணபாளையம் அருகே உள்ள தனியார் குடோனில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.

மூன்று டன் குட்கா பறிமுதல்
மூன்று டன் குட்கா பறிமுதல்

பின்னர் குடோனை திறந்து பார்த்தபோது, அதில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டை, மூட்டையாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா வாகனம் மூலம் குன்றத்தூர் எடுத்து வந்து காட்சிப்படுத்தினார்கள்.

இதையடுத்து தாம்பரம் துணை கமிஷன் சிபி. சக்கரவர்த்தி பறிமுதல் செய்யப்பட்ட குட்காவை பார்வையிட்டார். இந்த சம்பவத்தில் குடோன் உரிமையாளர் லோகநாதன்(42), உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்த காவல்துறையினர் நான்கு கார்கள், இரண்டு மொபெட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் இவர்கள் குட்காவை மொத்தமாக எடுத்து வந்து குடோனில் பதுக்கி வைத்து அதிகாலை நான்கு மணி முதல் 8 மணிக்குள் சிறு, சிறு கடைகளுக்கு காரில் எடுத்து சென்று சப்ளை செய்து வந்ததும் காவல்துறையினரிடம் சிக்காமல் இருப்பதற்காக தினமும் ஒரு செல்போன், ஒரு சிம் கார்டு பயன்படுத்தி வந்தனர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கஞ்சா சோதனையில் சிக்கிய ரூ.1.75 கோடி - 2 பேரிடம் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.