ETV Bharat / business

வாரத்தின் முதல்நாள் 500 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வரலாறு காணாத உயர்வைச் சந்தித்து வர்த்தகமாகிவருகிறது.

author img

By

Published : Feb 15, 2021, 1:30 PM IST

Sensex
Sensex

வாரத்தின் முதல் நாளான இன்று (பிப். 15) மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 515 புள்ளிகள் (ஒரு விழுக்காடு) உயர்ந்து வர்த்தகத்தைத் தொடங்கியது. இதையடுத்து சென்செக்ஸ் வரலாறு உச்சத்தைத் தொட்டு 52 ஆயிரத்து 299 புள்ளிகளில் வர்த்தகம் செய்துவருகிறது.

அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 135.90 (0.90 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 15,299 புள்ளிகளில் வர்த்தகமானது.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக, இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் 2 விழுக்காடு உயர்வு கண்டது. அதற்கு அடுத்தபடியாக ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன.

அதேவேளை ஓ.என்.ஜி.சி., டெக் மஹிந்திரா, என்.டி.பி.சி., சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் சரிவைக் கண்டன.

இதையும் படிங்க: நாட்டில் மூன்றில் ஒருவரிடம் போலி லைசென்ஸ்: ஆதங்கத்தில் போட்டுடைத்த கட்கரி

வாரத்தின் முதல் நாளான இன்று (பிப். 15) மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 515 புள்ளிகள் (ஒரு விழுக்காடு) உயர்ந்து வர்த்தகத்தைத் தொடங்கியது. இதையடுத்து சென்செக்ஸ் வரலாறு உச்சத்தைத் தொட்டு 52 ஆயிரத்து 299 புள்ளிகளில் வர்த்தகம் செய்துவருகிறது.

அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 135.90 (0.90 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 15,299 புள்ளிகளில் வர்த்தகமானது.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக, இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் 2 விழுக்காடு உயர்வு கண்டது. அதற்கு அடுத்தபடியாக ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன.

அதேவேளை ஓ.என்.ஜி.சி., டெக் மஹிந்திரா, என்.டி.பி.சி., சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் சரிவைக் கண்டன.

இதையும் படிங்க: நாட்டில் மூன்றில் ஒருவரிடம் போலி லைசென்ஸ்: ஆதங்கத்தில் போட்டுடைத்த கட்கரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.