ETV Bharat / business

ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை

author img

By

Published : Sep 15, 2020, 7:18 PM IST

வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்ததால் இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டு இன்றைய வர்த்தகத்தை நிறைவு செய்தது.

Market Roundup
Market Roundup

மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று (செப். 14) வர்த்தகமானதைவிட சுமார் 177 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இன்று (செப். 15) நாள் முழுவதும் ஏற்றத்திலேயே இந்திய பங்குச்சந்தை வர்த்தகமானது.

இன்றைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 287.72 புள்ளிகள் (0.74 விழுக்காடு) அதிகரித்து 39,044.35 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 81.75 புள்ளிகள் (0.71 விழுக்காடு) உயர்ந்து 11,521.80 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக இன்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் நான்கு விழுக்காடு வரை உயர்ந்தது. மேலும், பாரதி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், சன் பார்மா, ஹெச்.டி.எஃப்.சி மற்றும் கோட்டக் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

மறுபுறம் டைட்டன், மாருதி, ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்.சி.எல் டெக், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

திங்கள்கிழமை வர்த்தகத்தின் போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமா் 298 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பங்குகளை வாங்கினர்.

சர்வதேச பங்குச்சந்தை

சியோல், ஷாங்காய், ஹாங்காங் ஆகிய பங்குச்சந்தைகள் ஏற்றத்திலும் டோக்கியோ பங்குச்சந்தை சரிவிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவுசெய்தன.

அதேபோல ஐரோப்பிய பங்குச்சந்தைகள் தற்போது ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகின்றன.

ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை 1.49 விழுக்காடு அதிகரித்து, பேரல் ஒன்று 40.20 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமானது.

இந்திய ரூபாய் மதிப்பு

அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 பைசா குறைந்து 73 ரூபாய் 64 காசுகளுக்கு வர்த்தகமானது.

இதையும் படிங்க: விரைவில் 70 ஆயிரம் பேருக்கு வேலை - பிளிப்கார்ட் அதிரடி!

மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று (செப். 14) வர்த்தகமானதைவிட சுமார் 177 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இன்று (செப். 15) நாள் முழுவதும் ஏற்றத்திலேயே இந்திய பங்குச்சந்தை வர்த்தகமானது.

இன்றைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 287.72 புள்ளிகள் (0.74 விழுக்காடு) அதிகரித்து 39,044.35 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 81.75 புள்ளிகள் (0.71 விழுக்காடு) உயர்ந்து 11,521.80 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக இன்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் நான்கு விழுக்காடு வரை உயர்ந்தது. மேலும், பாரதி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், சன் பார்மா, ஹெச்.டி.எஃப்.சி மற்றும் கோட்டக் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

மறுபுறம் டைட்டன், மாருதி, ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்.சி.எல் டெக், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

திங்கள்கிழமை வர்த்தகத்தின் போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமா் 298 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பங்குகளை வாங்கினர்.

சர்வதேச பங்குச்சந்தை

சியோல், ஷாங்காய், ஹாங்காங் ஆகிய பங்குச்சந்தைகள் ஏற்றத்திலும் டோக்கியோ பங்குச்சந்தை சரிவிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவுசெய்தன.

அதேபோல ஐரோப்பிய பங்குச்சந்தைகள் தற்போது ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகின்றன.

ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை 1.49 விழுக்காடு அதிகரித்து, பேரல் ஒன்று 40.20 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமானது.

இந்திய ரூபாய் மதிப்பு

அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 பைசா குறைந்து 73 ரூபாய் 64 காசுகளுக்கு வர்த்தகமானது.

இதையும் படிங்க: விரைவில் 70 ஆயிரம் பேருக்கு வேலை - பிளிப்கார்ட் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.