ETV Bharat / business

ஏர்டெல்லுக்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் நஷ்டம்!

author img

By

Published : May 19, 2020, 12:09 PM IST

டெல்லி: வருவாய் அதிகரித்தபோதும் திருத்தப்பட்ட மொத்த வருவாய் பாக்கி காரணமாக மூன்று மாதங்களில் ஏர்டெல் நிறுவனம் 5,237 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

Bharti Airtel
Bharti Airtel

இந்திய தொலைத்தொடர்புத் துறையில் ஒரு காலத்தில் கொடிக்கட்டிப் பறந்த நிறுவனம் ஏர்டெல். பின் ஜியோவின் வருகை காரணமாகத் தொலைத்தொடர்புத் துறையில் கடும் போட்டி ஏற்பட்டது. அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சலுகைகளைப் போட்டிப் போட்டுக்கொண்டு வழங்கியதால் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் லாபம் பெருமளவு குறைந்துள்ளது.

2019-20ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடைசி காலாண்டில், பாரதி ஏர்டெல் நிறுவனம் 5,237 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. 2018-19ஆம் ஆண்டின் இதே காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் 107.2 கோடி ரூபாய் லாபம் அடைந்திருந்தது.

2018-19ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த வருவாய் 20,602.2 கோடி ரூபாயாக இருந்தது. இந்தக் காலாண்டில் வருவாய் சுமார் மூவாயிரம் கோடி அதிகரித்து 23,722.7 கோடி ரூபாயாக உள்ளது.

வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளபோதும் திருத்தப்பட்ட மொத்த வருவாய் பாக்கி காரணமாக ஏர்டெல் நிறுவனம் இந்த நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகவும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019-2020ஆம் நிதியாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் ரூ. 87,539 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் ஏழாயிரம் கோடி அதிகம். இருப்பினும் திருத்தப்பட்ட மொத்த வருவாய் பாக்கி உள்பட மற்ற செலவுகள் போக ஏர்டெல் நிறுவனம் ரூ. 32,183.2 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

2018-19ஆம் நிதியாண்டில் ஏர்டெல் நிறுவனம் 409.5 கோடி ரூபாய் நிகர லாபத்தைச் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்திய பங்குச் சந்தையிலிருந்து வெளியேறும் வேதாந்தா நிறுவனம்

இந்திய தொலைத்தொடர்புத் துறையில் ஒரு காலத்தில் கொடிக்கட்டிப் பறந்த நிறுவனம் ஏர்டெல். பின் ஜியோவின் வருகை காரணமாகத் தொலைத்தொடர்புத் துறையில் கடும் போட்டி ஏற்பட்டது. அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சலுகைகளைப் போட்டிப் போட்டுக்கொண்டு வழங்கியதால் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் லாபம் பெருமளவு குறைந்துள்ளது.

2019-20ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடைசி காலாண்டில், பாரதி ஏர்டெல் நிறுவனம் 5,237 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. 2018-19ஆம் ஆண்டின் இதே காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் 107.2 கோடி ரூபாய் லாபம் அடைந்திருந்தது.

2018-19ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த வருவாய் 20,602.2 கோடி ரூபாயாக இருந்தது. இந்தக் காலாண்டில் வருவாய் சுமார் மூவாயிரம் கோடி அதிகரித்து 23,722.7 கோடி ரூபாயாக உள்ளது.

வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளபோதும் திருத்தப்பட்ட மொத்த வருவாய் பாக்கி காரணமாக ஏர்டெல் நிறுவனம் இந்த நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகவும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019-2020ஆம் நிதியாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் ரூ. 87,539 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் ஏழாயிரம் கோடி அதிகம். இருப்பினும் திருத்தப்பட்ட மொத்த வருவாய் பாக்கி உள்பட மற்ற செலவுகள் போக ஏர்டெல் நிறுவனம் ரூ. 32,183.2 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

2018-19ஆம் நிதியாண்டில் ஏர்டெல் நிறுவனம் 409.5 கோடி ரூபாய் நிகர லாபத்தைச் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்திய பங்குச் சந்தையிலிருந்து வெளியேறும் வேதாந்தா நிறுவனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.