ETV Bharat / briefs

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

author img

By

Published : Sep 15, 2020, 7:11 PM IST

தஞ்சாவூர்: நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாட்டில் மாணவர் தற்கொலை தொடர்வதை தடுத்திட வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இந்திய மாணவர் சங்கத்தினர் பேரணியாக வந்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நீட் தேர்வில் மாணவர்கள் தற்கொலை செய்வதை நினைவுபடுத்தும்விதமாக கையில் சூலம் ஏந்தி, சூலத்தில் ஸ்டெதஸ்கோப் வைத்து மாணவர்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மாணவர்கள் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகளைத் தாண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது மாணவர்களுக்கும் காவல் துறையினருக்குமிடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் தரையில் படுத்தவாறு நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

உடனடியாக காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று காவல் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாட்டில் மாணவர் தற்கொலை தொடர்வதை தடுத்திட வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இந்திய மாணவர் சங்கத்தினர் பேரணியாக வந்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நீட் தேர்வில் மாணவர்கள் தற்கொலை செய்வதை நினைவுபடுத்தும்விதமாக கையில் சூலம் ஏந்தி, சூலத்தில் ஸ்டெதஸ்கோப் வைத்து மாணவர்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மாணவர்கள் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகளைத் தாண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது மாணவர்களுக்கும் காவல் துறையினருக்குமிடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் தரையில் படுத்தவாறு நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

உடனடியாக காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று காவல் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.