ETV Bharat / briefs

தருமபுரியில் இன்று நான்கு பேருக்கு கரோனா - தர்மபுரி மாவட்ட செய்திகள்

தருமபுரி : இன்று புதிதாக நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி மருத்துவமனை
தர்மபுரி மருத்துவமனை
author img

By

Published : Jun 10, 2020, 7:51 PM IST

தமிழ்நாட்டில் இன்று புதிதாக ஆயிரத்து 927 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 841ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு இன்று கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்திலிருந்து தருமபுரி பென்னாகரம் பகுதிக்கு வந்த லாரி ஓட்டுநர் ஒருவர், சென்னையில் இருந்து திரும்பிய இரண்டு பேர், கோயம்புத்தூரில் இருந்து திரும்பிய ஒருவர் என நால்வருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் தருமபுரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே எட்டு பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், 15 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இன்று புதிதாக ஆயிரத்து 927 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 841ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு இன்று கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்திலிருந்து தருமபுரி பென்னாகரம் பகுதிக்கு வந்த லாரி ஓட்டுநர் ஒருவர், சென்னையில் இருந்து திரும்பிய இரண்டு பேர், கோயம்புத்தூரில் இருந்து திரும்பிய ஒருவர் என நால்வருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் தருமபுரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே எட்டு பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், 15 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.