ETV Bharat / briefs

திருமழிசை சந்தையில் மாமூல் கேட்டு மிரட்டிய போலி ஆய்வாளர் கைது - Thiruvallur Latest News

திருவள்ளூர் : திருமழிசை சந்தையில் ஆய்வாளராக நடித்து காய்கறிகளை மிரட்டி வாங்கிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Fake analyst arrested for threatening Mamool
Fake analyst arrested for threatening Mamool
author img

By

Published : Jun 16, 2020, 8:58 AM IST

கரோனா தொற்று காரணமாக கோயம்பேடு மார்க்கெட், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமழிசைக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது.

இந்நிலையில், திருமழிசை காய்கறி சந்தையில் வெள்ளவேடு காவல் ஆய்வாளர் எனக் கூறி காய்கறி கடைகளில் மாமூல் தர வேண்டும் என்று சென்னை மகாகவி பாரதியார் நகரை சேர்ந்த ஆம் ரோஸ் (60) என்பவர் காய்கறிகளை மிரட்டி வாங்கியுள்ளார்.

அப்போது, அங்கு ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் மோசடி ஆய்வாளரை கைது செய்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி நீர் திறப்பு!

கரோனா தொற்று காரணமாக கோயம்பேடு மார்க்கெட், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமழிசைக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது.

இந்நிலையில், திருமழிசை காய்கறி சந்தையில் வெள்ளவேடு காவல் ஆய்வாளர் எனக் கூறி காய்கறி கடைகளில் மாமூல் தர வேண்டும் என்று சென்னை மகாகவி பாரதியார் நகரை சேர்ந்த ஆம் ரோஸ் (60) என்பவர் காய்கறிகளை மிரட்டி வாங்கியுள்ளார்.

அப்போது, அங்கு ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் மோசடி ஆய்வாளரை கைது செய்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி நீர் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.