ETV Bharat / bharat

பிகாரில் லாலு கட்சி மற்றும் முதலமைச்சர் நிதீஷ் கட்சி அமைச்சர்களுக்கு இடையே வார்த்தைப்போர்!

author img

By

Published : Jul 9, 2023, 1:36 PM IST

பிகார் மாநிலத்தில் பிரதமர் மோடி ஆதரவில் முதலமைச்சராக இருந்த நிதீஷ் குமார், அக்கூட்டணியில் இருந்து விலகி, தற்போது, லாலு பிரசாத் யாதவ் கட்சியின் ஆதரவில், முதலமைச்சராக உள்ளார். இந்நிலையில், லாலு கட்சி மற்றும் நிதீஷ் கட்சி அமைச்சர்கள் வார்த்தைப் போர் நடத்தி வரும் நிலையில் அங்கு அரசியல் சூழல் பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது.

War of words between ruling RJD and united janata dal ministers
பிகாரில் லாலு கட்சி மற்றும் முதலமைச்சர் நிதீஷ் கட்சி அமைச்சர்களுக்கு இடையே வார்த்தைப் போரால் அரசியல் பரபரப்பு!

பாட்னா: பிகார் மாநில கல்வித்துறை அமைச்சருக்கும், அத்துறையின் தலைமைக் கூடுதல் செயலாளருக்கும் இடையே உருவாகி உள்ள ஊடல், மகா கூட்டணியில் பூசலை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கி உள்ளது. ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சி மாமன்ற உறுப்பினரும், லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய நண்பருமான சுனில் குமார் சிங், ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த ஒதுக்கீட்டுத் துறை அமைச்சர் அசோக் சவுத்ரியை, நிதீஷ் குமாருக்கும் துரோகம் செய்யத்தயங்க மாட்டார் என்று, அவர் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து உள்ளார்.

எதற்கும் ஒரு எல்லை உண்டு, இதே நிலை தொடர்ந்தால், கூட்டணி என்ற அணை உடைபடுவதை, யாராலும் தடுக்க முடியாது என்று, ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தித் தொடர்பாளர் டாக்டர். சுனில் சிங், காட்டமாகப் பதிலடி கொடுத்து உள்ளார்.

முன்னதாக, ஆர்ஜேடி எம்எல்சி சுனில் குமார் சிங், தனது முகநூல் பதிவின் மூலம் பிகார் அரசு அதிகாரிகளை மோசடி மற்றும் கொள்ளைக்காரர்களாக வர்ணித்து இருந்தார். இதுமட்டுமல்லாது, கல்விஅமைச்சர் சந்திரசேகர் சிங்கிற்கு, ஆதரவு அளிக்கும் வகையில் பதிவிட்டு இருந்தார்.

பிகார் முன்னாள் முதலமைச்சர் ராப்ரி தேவியின் சகோதரராக அறியப்பட்டவரும், ஆர்ஜேடி எம்எல்சியுமான சுனில் சிங், ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஒதுக்கீட்டுத் துறை அமைச்சர் அசோக் சவுத்ரி குறித்து கூறுகையில், ’’அசோக் சவுத்ரி தினமும் கட்சி மாறுகிறவர், அவர் பல கட்சிகளின் ருசியை அறிந்தவர். காங்கிரஸ் தலைவர் ராஜோ சிங் கொலையில் அசோக் சவுத்ரியின் பெயரும் அடிபட்டதாக’’ அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

’2025ஆம் ஆண்டுக்கு முன்னர் அசோக் சவுத்ரி தனது தலைவரை விட்டுவிட்டு தனக்கு நன்மை கிடைக்கும் இடத்திற்குச் செல்வார் என்று சுனில் சிங் கூறியுள்ளார். ஆர்ஜேடி எம்எல்சி சுனில் சிங் இத்துடன் நின்றுவிடாமல், சட்டப்பேரவையில் ராப்ரி தேவியை, அசோக் சவுத்ரி அவமானப்படுத்தியதாகக் கூறினார். அவரும் நிதீஷ்குமாரை ஏமாற்றுவார்.

2025ஆம் ஆண்டுக்கு முன்னதாக, அசோக் சவுத்ரி, தற்போது தான் சார்ந்து உள்ள கட்சியை விட்டுவிட்டு, தனக்கு நன்மை கிடைக்கும் வேறு இடத்திற்குச் செல்வார்’ என்று சுனில் சிங் கூறியுள்ளார். ஆர்ஜேடி எம்எல்சி சுனில் சிங் இத்துடன் நின்றுவிடாமல், சட்டசபையில் ராப்ரி தேவியை அவமானப்படுத்திய அசோக் சவுத்ரி, நிதிஷ்குமாரை ஏமாற்றுவார் என்று கூறி அரசியல் பரபரப்பை மேலும் அதிகமாக்கி உள்ளார்.

1995ஆம் ஆண்டில், கூட்டுறவு சங்கத்தின் முக்கியத் தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அசோக் சௌத்ரியின் பெயரும் இடம் பெற்றுள்ளது, அவரது உயிர் எப்படி காப்பாற்றப்பட்டது என்பது அனைவரும் அறிவர் என்று குறிப்பிட்டு உள்ளார். சுனில் சிங் பாஜகவின் மொழியில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சனிக்கிழமை (ஜூலை 8) அசோக் சவுத்ரியை சுனில் சிங் கடுமையாக தாக்கிப் பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுனில் சிங்கின் இந்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருத்து தெரிவித்து உள்ள அசோக் சவுத்ரி, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில், சுனில் சிங் மட்டும் தலைவர் இல்லை என்றார். அவர் கூறியதில் எந்த அர்த்தமும் இல்லை; லாலு யாதவ் என்ன சொன்னார், ராப்ரி தேவி என்ன சொன்னார் என்பது முக்கியமானது என்று தெரிவித்து உள்ளார்.

முன்னதாக, கல்வி அமைச்சர் பேராசிரியர் சந்திரசேகர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கே. பதக் இடையிலான வார்த்தைப் போர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில், முதலமைச்சர் நிதீஷ் குமார் முதல் லாலு பிரசாத் வரை தலையிட வேண்டிய நிலையில் இரு தரப்பிலும் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதையும் படிங்க: ஹிமாச்சல்: பியாஸ் ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு - நிலச்சரிவில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் மீட்பு!

பாட்னா: பிகார் மாநில கல்வித்துறை அமைச்சருக்கும், அத்துறையின் தலைமைக் கூடுதல் செயலாளருக்கும் இடையே உருவாகி உள்ள ஊடல், மகா கூட்டணியில் பூசலை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கி உள்ளது. ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சி மாமன்ற உறுப்பினரும், லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய நண்பருமான சுனில் குமார் சிங், ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த ஒதுக்கீட்டுத் துறை அமைச்சர் அசோக் சவுத்ரியை, நிதீஷ் குமாருக்கும் துரோகம் செய்யத்தயங்க மாட்டார் என்று, அவர் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து உள்ளார்.

எதற்கும் ஒரு எல்லை உண்டு, இதே நிலை தொடர்ந்தால், கூட்டணி என்ற அணை உடைபடுவதை, யாராலும் தடுக்க முடியாது என்று, ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தித் தொடர்பாளர் டாக்டர். சுனில் சிங், காட்டமாகப் பதிலடி கொடுத்து உள்ளார்.

முன்னதாக, ஆர்ஜேடி எம்எல்சி சுனில் குமார் சிங், தனது முகநூல் பதிவின் மூலம் பிகார் அரசு அதிகாரிகளை மோசடி மற்றும் கொள்ளைக்காரர்களாக வர்ணித்து இருந்தார். இதுமட்டுமல்லாது, கல்விஅமைச்சர் சந்திரசேகர் சிங்கிற்கு, ஆதரவு அளிக்கும் வகையில் பதிவிட்டு இருந்தார்.

பிகார் முன்னாள் முதலமைச்சர் ராப்ரி தேவியின் சகோதரராக அறியப்பட்டவரும், ஆர்ஜேடி எம்எல்சியுமான சுனில் சிங், ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஒதுக்கீட்டுத் துறை அமைச்சர் அசோக் சவுத்ரி குறித்து கூறுகையில், ’’அசோக் சவுத்ரி தினமும் கட்சி மாறுகிறவர், அவர் பல கட்சிகளின் ருசியை அறிந்தவர். காங்கிரஸ் தலைவர் ராஜோ சிங் கொலையில் அசோக் சவுத்ரியின் பெயரும் அடிபட்டதாக’’ அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

’2025ஆம் ஆண்டுக்கு முன்னர் அசோக் சவுத்ரி தனது தலைவரை விட்டுவிட்டு தனக்கு நன்மை கிடைக்கும் இடத்திற்குச் செல்வார் என்று சுனில் சிங் கூறியுள்ளார். ஆர்ஜேடி எம்எல்சி சுனில் சிங் இத்துடன் நின்றுவிடாமல், சட்டப்பேரவையில் ராப்ரி தேவியை, அசோக் சவுத்ரி அவமானப்படுத்தியதாகக் கூறினார். அவரும் நிதீஷ்குமாரை ஏமாற்றுவார்.

2025ஆம் ஆண்டுக்கு முன்னதாக, அசோக் சவுத்ரி, தற்போது தான் சார்ந்து உள்ள கட்சியை விட்டுவிட்டு, தனக்கு நன்மை கிடைக்கும் வேறு இடத்திற்குச் செல்வார்’ என்று சுனில் சிங் கூறியுள்ளார். ஆர்ஜேடி எம்எல்சி சுனில் சிங் இத்துடன் நின்றுவிடாமல், சட்டசபையில் ராப்ரி தேவியை அவமானப்படுத்திய அசோக் சவுத்ரி, நிதிஷ்குமாரை ஏமாற்றுவார் என்று கூறி அரசியல் பரபரப்பை மேலும் அதிகமாக்கி உள்ளார்.

1995ஆம் ஆண்டில், கூட்டுறவு சங்கத்தின் முக்கியத் தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அசோக் சௌத்ரியின் பெயரும் இடம் பெற்றுள்ளது, அவரது உயிர் எப்படி காப்பாற்றப்பட்டது என்பது அனைவரும் அறிவர் என்று குறிப்பிட்டு உள்ளார். சுனில் சிங் பாஜகவின் மொழியில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சனிக்கிழமை (ஜூலை 8) அசோக் சவுத்ரியை சுனில் சிங் கடுமையாக தாக்கிப் பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுனில் சிங்கின் இந்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருத்து தெரிவித்து உள்ள அசோக் சவுத்ரி, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில், சுனில் சிங் மட்டும் தலைவர் இல்லை என்றார். அவர் கூறியதில் எந்த அர்த்தமும் இல்லை; லாலு யாதவ் என்ன சொன்னார், ராப்ரி தேவி என்ன சொன்னார் என்பது முக்கியமானது என்று தெரிவித்து உள்ளார்.

முன்னதாக, கல்வி அமைச்சர் பேராசிரியர் சந்திரசேகர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கே. பதக் இடையிலான வார்த்தைப் போர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில், முதலமைச்சர் நிதீஷ் குமார் முதல் லாலு பிரசாத் வரை தலையிட வேண்டிய நிலையில் இரு தரப்பிலும் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதையும் படிங்க: ஹிமாச்சல்: பியாஸ் ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு - நிலச்சரிவில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.