ETV Bharat / bharat

பிரதமர் மோடி, இலங்கை அதிபருக்கு அழுத்தம் கொடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

author img

By

Published : Jul 19, 2023, 8:38 PM IST

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக இலங்கை, இந்தியாவிற்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

இலங்கை: தமிழ் மக்கள் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக இலங்கை, இந்தியாவிற்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்துமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் நிர்வாகம் தொடர்பாக இந்தியாவிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு இலங்கை அதிபரிடம் அவரது இந்திய வருகையின்போது வலியுறுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளையும், பொறுப்புகூறலையும் நிறைவேற்றுவதற்கு தவறியுள்ளதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நிலம், போலீஸ் அதிகாரங்களுடன் கூடிய அதிகாரப் பகிர்வை நிராகரித்து, 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தாதிருப்பதற்கு இலங்கை முயற்சிப்பதாகவும் இலங்கையின் தமிழ் மக்களது பாதுகாப்பு, தனித்துவம் மற்றும் இருப்பு என்பன இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு அப்பாற்பட்ட விஷயம் அல்ல எனவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மை சமூகமாக தமிழ் மக்கள் வாழ்ந்துவரும் நிலையில், அவர்களுக்கு சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், தமிழ்க் கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களை அனுப்பி வைத்துள்ளன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதுவரிடம் தமது கோரிக்​கைகள் அடங்கிய கடிதத்தினை கடந்த 10ஆம் தேதி கொடுத்துள்ளது. இந்த நிலையில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து மற்றுமொரு கடிதத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கும் நோக்கில், கடந்த 13ஆம் தேதி இலங்கைக்கான இந்திய உயர் அதிகாரியிடம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கடத்தல் சிலைகள் மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பு! 105 பழங்கால சிற்பங்கள் இந்தியா வருகை!

இலங்கை: தமிழ் மக்கள் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக இலங்கை, இந்தியாவிற்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்துமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் நிர்வாகம் தொடர்பாக இந்தியாவிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு இலங்கை அதிபரிடம் அவரது இந்திய வருகையின்போது வலியுறுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளையும், பொறுப்புகூறலையும் நிறைவேற்றுவதற்கு தவறியுள்ளதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நிலம், போலீஸ் அதிகாரங்களுடன் கூடிய அதிகாரப் பகிர்வை நிராகரித்து, 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தாதிருப்பதற்கு இலங்கை முயற்சிப்பதாகவும் இலங்கையின் தமிழ் மக்களது பாதுகாப்பு, தனித்துவம் மற்றும் இருப்பு என்பன இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு அப்பாற்பட்ட விஷயம் அல்ல எனவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மை சமூகமாக தமிழ் மக்கள் வாழ்ந்துவரும் நிலையில், அவர்களுக்கு சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், தமிழ்க் கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களை அனுப்பி வைத்துள்ளன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதுவரிடம் தமது கோரிக்​கைகள் அடங்கிய கடிதத்தினை கடந்த 10ஆம் தேதி கொடுத்துள்ளது. இந்த நிலையில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து மற்றுமொரு கடிதத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கும் நோக்கில், கடந்த 13ஆம் தேதி இலங்கைக்கான இந்திய உயர் அதிகாரியிடம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கடத்தல் சிலைகள் மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பு! 105 பழங்கால சிற்பங்கள் இந்தியா வருகை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.