ETV Bharat / bharat

ஓபிஎஸ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கிடையாது... உச்ச நீதிமன்றம்...

author img

By

Published : Sep 12, 2022, 3:40 PM IST

Updated : Sep 12, 2022, 4:56 PM IST

அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக ஓ.பன்னீர்செல்வம் இல்லாதபோது அக்கட்சியின் தலைமை அலுவலக சாவிக்கு உரிமை கோருவது எப்படி என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் அவரது மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

supreme court verdict on aiadmk hq case
Etv Bharat

டெல்லி: அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்ததற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிபதிகள், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம் அக்கட்சியின் தலைமை அலுவலக சாவியை கோருவது எப்படி..?. ஒரு அரசியல் கட்சியை செயல்படவிடாமல் தடுப்பதை ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது. அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் உயர் நீதிமன்றம் வழங்கியதில் தவறு ஒன்றும் கிடையாது என்று தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே வன்முறை வெடித்ததால், வருவாய்த்துறை அலுவலர்கள் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

இதனால் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் அலுவல சாவி ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய்த்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட ஓ.பன்னீர்செல்வம் இல்லாத போது தலைமை அலுவலகத்துக்கு உரிமை கோர முடியாது என்றும் சொந்த கட்சிப் பணத்தை கையாடல் செய்தும், அலுவலக பூட்டை உடைத்தும் உள் நுழைந்தவரிடம் சாவியை ஒப்படைக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று (செப். 11) நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில், ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்தனர். ஒரு அரசியல் கட்சியை செயல்படவிடாமல் தடுப்பதை ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது. அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியதில் தவறு ஒன்றும் கிடையாது என்று தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அடித்தாடும் ஈபிஎஸ்..! பதுங்கி பாய தயாராகும் ஓபிஎஸ்..! அதிமுகவின் அடுத்த நகர்வு என்ன..?

டெல்லி: அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்ததற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிபதிகள், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம் அக்கட்சியின் தலைமை அலுவலக சாவியை கோருவது எப்படி..?. ஒரு அரசியல் கட்சியை செயல்படவிடாமல் தடுப்பதை ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது. அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் உயர் நீதிமன்றம் வழங்கியதில் தவறு ஒன்றும் கிடையாது என்று தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே வன்முறை வெடித்ததால், வருவாய்த்துறை அலுவலர்கள் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

இதனால் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் அலுவல சாவி ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய்த்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட ஓ.பன்னீர்செல்வம் இல்லாத போது தலைமை அலுவலகத்துக்கு உரிமை கோர முடியாது என்றும் சொந்த கட்சிப் பணத்தை கையாடல் செய்தும், அலுவலக பூட்டை உடைத்தும் உள் நுழைந்தவரிடம் சாவியை ஒப்படைக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று (செப். 11) நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில், ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்தனர். ஒரு அரசியல் கட்சியை செயல்படவிடாமல் தடுப்பதை ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது. அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியதில் தவறு ஒன்றும் கிடையாது என்று தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அடித்தாடும் ஈபிஎஸ்..! பதுங்கி பாய தயாராகும் ஓபிஎஸ்..! அதிமுகவின் அடுத்த நகர்வு என்ன..?

Last Updated : Sep 12, 2022, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.