ETV Bharat / bharat

லஞ்சம் கொடுத்து நாடு கடத்தலை தாமதப்படுத்தும் மெகுல் சோக்சி - திடுக்கிடும் தகவல்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி கடன் மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டிற்கு தப்பிய தொழிலதிபர் மெகுல் சோக்சி, அன்டிகுவா நாட்டில் போலீசார் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து நாடு கடத்தலை தாமதப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

author img

By

Published : Jan 14, 2023, 6:56 AM IST

மெஹுல் ஜோக்சி
மெஹுல் ஜோக்சி

ஆண்டிகுவா: பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் மெகுல் சோக்சி, இந்தியாவில் இருந்து தப்பித்து கரீபியன் தீவு நாடான ஆண்டிகுவா மற்றும் பார்படாஸ் நாட்டில் குடிபெயர்ந்தார். அவரை நாடு கடத்தும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து போராடி வருகிறது. இதனிடையே, ஆண்டிகுவாநாட்டில் லஞ்சம் கொடுத்து தனக்கான பாதுகாப்பை மெகுல் சோக்சி பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியகி உள்ளது.

பிரபல நிதிக் குற்ற ஆய்வாளரான கென்னத் ரிஜோக் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஆண்டிகுவா அரசின் போலீசார் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மெகுல் சோக்சி நாடு கடத்தலை தவிர்த்துவருகிறார். இதனால் மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு கொண்டுவரும் முயற்சியில் பெரும் பின்னடை ஏற்பட்டுள்ளது. ஆண்டிகுவாவின் மூத்த காவல்துறை அதிகாரி அடோனிஸ் ஹென்றி உதவி உடன் நீதிமன்ற நடவடிக்கைகளை தனக்கு சாதகமாக அவர் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மெகுல் சோக்சி ஒரு நாளைக்கு மூன்று முறையாவது அலுவலர்களை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆண்டிகுவா நீதிபதிகளும் அவருக்கு சாதகமான சூழலை உருவாக்கி வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - கியூபா இடையே நாடு கடத்தப்படும் ஒப்பந்தம் இல்லாத நிலையில், அங்கு தப்பிச் செல்ல முயன்ற ஜோக்சி பல்வேறு காரணங்களால் டொமினிகா தீவுகளுக்கு சென்றார். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று டொமினிகார தீவுகள் அரசு ஜோக்சியை நாடு கடத்த உத்தரவிட்டது. இருப்பினும் உள்ளூர் அரசியல் வாதிகள் மற்றும் நீதித்துறை, அரசு அதிகாரிகளின் உதவியுடன் ஜோக்சி தப்பித்துவருகிறார்.

இதையும் படிங்க:MV Ganga Vilas cruise: ஒரு கப்பலில் இவ்வளவு வசதிகளா? மலைக்க வைக்கும் டிக்கெட் விலை!

ஆண்டிகுவா: பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் மெகுல் சோக்சி, இந்தியாவில் இருந்து தப்பித்து கரீபியன் தீவு நாடான ஆண்டிகுவா மற்றும் பார்படாஸ் நாட்டில் குடிபெயர்ந்தார். அவரை நாடு கடத்தும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து போராடி வருகிறது. இதனிடையே, ஆண்டிகுவாநாட்டில் லஞ்சம் கொடுத்து தனக்கான பாதுகாப்பை மெகுல் சோக்சி பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியகி உள்ளது.

பிரபல நிதிக் குற்ற ஆய்வாளரான கென்னத் ரிஜோக் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஆண்டிகுவா அரசின் போலீசார் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மெகுல் சோக்சி நாடு கடத்தலை தவிர்த்துவருகிறார். இதனால் மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு கொண்டுவரும் முயற்சியில் பெரும் பின்னடை ஏற்பட்டுள்ளது. ஆண்டிகுவாவின் மூத்த காவல்துறை அதிகாரி அடோனிஸ் ஹென்றி உதவி உடன் நீதிமன்ற நடவடிக்கைகளை தனக்கு சாதகமாக அவர் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மெகுல் சோக்சி ஒரு நாளைக்கு மூன்று முறையாவது அலுவலர்களை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆண்டிகுவா நீதிபதிகளும் அவருக்கு சாதகமான சூழலை உருவாக்கி வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - கியூபா இடையே நாடு கடத்தப்படும் ஒப்பந்தம் இல்லாத நிலையில், அங்கு தப்பிச் செல்ல முயன்ற ஜோக்சி பல்வேறு காரணங்களால் டொமினிகா தீவுகளுக்கு சென்றார். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று டொமினிகார தீவுகள் அரசு ஜோக்சியை நாடு கடத்த உத்தரவிட்டது. இருப்பினும் உள்ளூர் அரசியல் வாதிகள் மற்றும் நீதித்துறை, அரசு அதிகாரிகளின் உதவியுடன் ஜோக்சி தப்பித்துவருகிறார்.

இதையும் படிங்க:MV Ganga Vilas cruise: ஒரு கப்பலில் இவ்வளவு வசதிகளா? மலைக்க வைக்கும் டிக்கெட் விலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.