ETV Bharat / bharat

ட்விட்டரில் டிரெண்டாகும் ‘Proud of Shah Rukh Khan’.! ஏன் தெரியுமா.?

author img

By

Published : Jan 9, 2023, 10:28 AM IST

டெல்லி கார் விபத்தில் உயிரிழந்த அஞ்சலி சிங் குடும்பத்திற்கு தனது ஃபவுண்டேஷன் மூலமாக நடிகர் ஷாருக்கான் உதவியுள்ளார். இதனால் நெகிழ்ந்துபோன அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ‘Proud of Shah Rukh Khan’ என பதிவிட்டு வருகின்றனர்.

ஷாருக்கான்
ஷாருக்கான்

ஹைதராபாத்: டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் அஞ்சலி சிங், கார் மோதி சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் ஏழு பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், இதில் அஞ்சலி சிங் தோழி நிதி என்ற பெண்ணும் ஈடுபட்டுள்ளதாகவும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.

அஞ்சலி சிங்கின் தோழி தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியானது. விபத்து நடந்து 8 நாள்கள் கடந்த நிலையில், அவரது தோழி நிதி குறித்த தகவல்கள் மர்மமாக இருக்கிறது. இதுகுறித்த விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த அஞ்சலி சிங், தனது குடும்பத்தின் பொருளாதார ஆதாரமாக இருந்துள்ளார். இவரது இறப்பினால், இவர் குடும்பம் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான், உயிரிழந்த அஞ்சலி சிங் குடும்பத்துக்கு, தனது மீர் ஃபவுண்டேஷன் மூலம், நிதியுதவி செய்திருக்கிறார். ஆனால், அவர் கொடுத்த தொகை குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இவரது இத்தகைய செயல் அவரது ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து இவரது ரசிகர்கள் ‘Proud of Shah Rukh Khan’என ட்விட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: அஞ்சலி இறப்பில் தொடரும் மர்மம்: வழக்கில் 7 பேருக்கு தொடர்பு என போலீஸ் பகீர் தகவல்!

ஹைதராபாத்: டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் அஞ்சலி சிங், கார் மோதி சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் ஏழு பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், இதில் அஞ்சலி சிங் தோழி நிதி என்ற பெண்ணும் ஈடுபட்டுள்ளதாகவும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.

அஞ்சலி சிங்கின் தோழி தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியானது. விபத்து நடந்து 8 நாள்கள் கடந்த நிலையில், அவரது தோழி நிதி குறித்த தகவல்கள் மர்மமாக இருக்கிறது. இதுகுறித்த விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த அஞ்சலி சிங், தனது குடும்பத்தின் பொருளாதார ஆதாரமாக இருந்துள்ளார். இவரது இறப்பினால், இவர் குடும்பம் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான், உயிரிழந்த அஞ்சலி சிங் குடும்பத்துக்கு, தனது மீர் ஃபவுண்டேஷன் மூலம், நிதியுதவி செய்திருக்கிறார். ஆனால், அவர் கொடுத்த தொகை குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இவரது இத்தகைய செயல் அவரது ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து இவரது ரசிகர்கள் ‘Proud of Shah Rukh Khan’என ட்விட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: அஞ்சலி இறப்பில் தொடரும் மர்மம்: வழக்கில் 7 பேருக்கு தொடர்பு என போலீஸ் பகீர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.