ETV Bharat / bharat

வேலை தேடி சென்றவரின் கண்களை குருடாக்கி பிச்சை எடுக்க வைத்த கொடுமை

author img

By

Published : Nov 4, 2022, 10:37 PM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வேலை தேடி திரிந்தவரை அழைத்து சென்று கண்களை குருடாக்கி பிச்சை எடுப்பதற்காக விற்பனை செய்த சம்பவம் நடந்துள்ளது.

Man abducted, blinded with chemical, sold for Rs 70k
Man abducted, blinded with chemical, sold for Rs 70k

கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த சுரேஷ் மஞ்சி என்பவர் வேலை தேடி வந்துள்ளார். அப்போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜய் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு விஜய் சுரேஷிடம் வேலை இருப்பதாகவும், அதுகுறித்து பேச ​ஜகர்கட்டி பாலம் அருகே வருமாறு தெரிவித்துள்ளார். இதை நம்பி அங்கு சென்ற சுரேஷை தாக்கி கை, கால்களை உடைத்துள்ளார் விஜய். அதோடு அவரை கைத்துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தியும், அவரது கண்களில் ரசாயனத்தை ஊற்றி குருடாக்கியும் உள்ளார்.

அதன்பின் டெல்லியை சேர்ந்த ஒரு கும்பலிடம் ரூ.70,000 ரூபாய்க்கு சுரேஷை விற்பனை செய்துள்ளார். அதைத்தொடர்ந்து சுரேஷை அந்த கும்பல் டெல்லியில் பிச்சை எடுக்க வைத்துள்ளது. இதனிடையே சுரேஷின் உடல் நிலை மிகவும் மேசமானதால் அந்த கும்பல் 2 மாதங்களுக்கு முன்பு கான்பூருக்கு திருப்பி அனுப்பிவைத்துள்ளது.

அதன்பின் அருகிலிருந்தவர்களின் உதவியுடன் அவர் சொந்த ஊரான நௌபஸ்தாவுக்கு சென்றார். இவரது நிலைமை கண்ட நௌபஸ்தா கவுன்சிலர் பிரசாந்த் சுக்லா அவரிடம் விசாரித்தபோது மேற்கூரிய சம்பவம் தெரியவந்தது. அதன்பின் அவரது உதவியுடன் சுரேஷ், நௌபஸ்தா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: உ.பி.யில் 11 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 2 பேருக்கு மரண தண்டணை!

கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த சுரேஷ் மஞ்சி என்பவர் வேலை தேடி வந்துள்ளார். அப்போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜய் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு விஜய் சுரேஷிடம் வேலை இருப்பதாகவும், அதுகுறித்து பேச ​ஜகர்கட்டி பாலம் அருகே வருமாறு தெரிவித்துள்ளார். இதை நம்பி அங்கு சென்ற சுரேஷை தாக்கி கை, கால்களை உடைத்துள்ளார் விஜய். அதோடு அவரை கைத்துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தியும், அவரது கண்களில் ரசாயனத்தை ஊற்றி குருடாக்கியும் உள்ளார்.

அதன்பின் டெல்லியை சேர்ந்த ஒரு கும்பலிடம் ரூ.70,000 ரூபாய்க்கு சுரேஷை விற்பனை செய்துள்ளார். அதைத்தொடர்ந்து சுரேஷை அந்த கும்பல் டெல்லியில் பிச்சை எடுக்க வைத்துள்ளது. இதனிடையே சுரேஷின் உடல் நிலை மிகவும் மேசமானதால் அந்த கும்பல் 2 மாதங்களுக்கு முன்பு கான்பூருக்கு திருப்பி அனுப்பிவைத்துள்ளது.

அதன்பின் அருகிலிருந்தவர்களின் உதவியுடன் அவர் சொந்த ஊரான நௌபஸ்தாவுக்கு சென்றார். இவரது நிலைமை கண்ட நௌபஸ்தா கவுன்சிலர் பிரசாந்த் சுக்லா அவரிடம் விசாரித்தபோது மேற்கூரிய சம்பவம் தெரியவந்தது. அதன்பின் அவரது உதவியுடன் சுரேஷ், நௌபஸ்தா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: உ.பி.யில் 11 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 2 பேருக்கு மரண தண்டணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.