ETV Bharat / bharat

பெங்களூரு வெள்ளச்சூழலை சமாளிக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்பினை சமாளிக்க 300 கோடி ரூபாய் ஒதுக்கி மாநில அரசு உத்தரவுபிறப்பித்துள்ளது.

author img

By

Published : Sep 6, 2022, 10:33 PM IST

பெங்களூரு வெள்ளச் சூழலை சமாளிக்க 300 கோடி ஒதுக்கீடு
பெங்களூரு வெள்ளச் சூழலை சமாளிக்க 300 கோடி ஒதுக்கீடு

பெங்களூரு: பெங்களூருவில் கனமழை தொடர்ந்து பெரும் பாதிப்பை உருவாக்கி வருவதால், நகரின் வெள்ளச்சூழலை சமாளிக்க 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில், பெங்களூருவில் ஏற்பட்டுள்ள மழை மற்றும் வெள்ளப்பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய, நேற்று இரவு மூத்த அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுடன் முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ”மாநிலம் முழுவதும் மழை மற்றும் வெள்ளச் சூழலை சமாளிக்க ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. சாலைகள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள், பள்ளிகள் போன்ற சேதமடைந்த உள்கட்டமைப்புகளை மீட்க பெங்களூருவுக்கு மட்டும் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்புகளை உருவாக்க தனித்தனியாக ரூ.500 கோடி ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டிருந்தது. பெங்களூருவில் மழைநீர் வடிகால் அமைக்க மொத்தம் ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் குறைந்தவுடன் பணிகள் தொடங்கும்.

மாநில பேரிடர் மீட்புப் படையின் (SDRF) மேலும் ஒரு நிறுவனத்தை பெங்களூருவிற்கு பிரத்யேகமாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. படகுகள் மற்றும் இதர உபகரணங்களுக்காக ரூ.9.50 கோடி விடுவிக்கப்படுகிறது. மாநில அளவில், SDRFன் மேலும் இரண்டு நிறுவனங்கள் வரும் நாட்களில் அமைக்கப்படும்.

செப்டம்பர் 1 முதல் 5 வரை நகரின் சில பகுதிகளில் இயல்பை விட மழைப்பொழிவு 150 விழுக்காடு அதிகமாகவும், மகாதேவபுரா, பொம்மனஹள்ளி மற்றும் கே.ஆர். ​​புரம் மண்டலங்களில் இயல்பை விட 307 விழுக்காடு அதிகமாகவும் மழை பெய்துள்ளது”, எனத் தெரிவித்துளார்.

கடந்த 31 ஆண்டுகளில் (1992-93) பெய்த மிக அதிகமான மழைப்பொழிவு இதுவாகும். இதனால், பெங்களூருவில் உள்ள 164 ஏரிகள் நீரால் நிரம்பியுள்ளன.

இதையும் படிங்க: பூமியை காப்பாற்ற ஆசிரியர் ஒருவரின் 35 ஆண்டுகால போராட்டம்

பெங்களூரு: பெங்களூருவில் கனமழை தொடர்ந்து பெரும் பாதிப்பை உருவாக்கி வருவதால், நகரின் வெள்ளச்சூழலை சமாளிக்க 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில், பெங்களூருவில் ஏற்பட்டுள்ள மழை மற்றும் வெள்ளப்பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய, நேற்று இரவு மூத்த அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுடன் முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ”மாநிலம் முழுவதும் மழை மற்றும் வெள்ளச் சூழலை சமாளிக்க ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. சாலைகள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள், பள்ளிகள் போன்ற சேதமடைந்த உள்கட்டமைப்புகளை மீட்க பெங்களூருவுக்கு மட்டும் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்புகளை உருவாக்க தனித்தனியாக ரூ.500 கோடி ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டிருந்தது. பெங்களூருவில் மழைநீர் வடிகால் அமைக்க மொத்தம் ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் குறைந்தவுடன் பணிகள் தொடங்கும்.

மாநில பேரிடர் மீட்புப் படையின் (SDRF) மேலும் ஒரு நிறுவனத்தை பெங்களூருவிற்கு பிரத்யேகமாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. படகுகள் மற்றும் இதர உபகரணங்களுக்காக ரூ.9.50 கோடி விடுவிக்கப்படுகிறது. மாநில அளவில், SDRFன் மேலும் இரண்டு நிறுவனங்கள் வரும் நாட்களில் அமைக்கப்படும்.

செப்டம்பர் 1 முதல் 5 வரை நகரின் சில பகுதிகளில் இயல்பை விட மழைப்பொழிவு 150 விழுக்காடு அதிகமாகவும், மகாதேவபுரா, பொம்மனஹள்ளி மற்றும் கே.ஆர். ​​புரம் மண்டலங்களில் இயல்பை விட 307 விழுக்காடு அதிகமாகவும் மழை பெய்துள்ளது”, எனத் தெரிவித்துளார்.

கடந்த 31 ஆண்டுகளில் (1992-93) பெய்த மிக அதிகமான மழைப்பொழிவு இதுவாகும். இதனால், பெங்களூருவில் உள்ள 164 ஏரிகள் நீரால் நிரம்பியுள்ளன.

இதையும் படிங்க: பூமியை காப்பாற்ற ஆசிரியர் ஒருவரின் 35 ஆண்டுகால போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.