ETV Bharat / bharat

மகாத்மா காந்தி ஒரு பட்டம் கூட பெறவில்லை.. ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்..

author img

By

Published : Mar 24, 2023, 9:06 PM IST

மகாத்மா காந்தி சட்டப் படிப்பு பட்டம் பெறவில்லை என்று ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காந்தியின் படிப்பு குறித்து சர்ச்சையாக பேசிய ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்!
காந்தியின் படிப்பு குறித்து சர்ச்சையாக பேசிய ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்!

டெல்லி: மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் நேற்று (மார்ச் 23) நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, “காந்தியடிகள் சட்டப் படிப்பு பட்டம் பெற்றவர் என்ற தவறான கருத்து உள்ளது. ஆனால், மகாத்மா காந்தி ஒரு பல்கலைக்கழக பட்டம் கூட பெற்றதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

அவருடைய கல்வித் தகுதி என்பது உயர்நிலை பள்ளி, டிப்ளமோ படிப்பு மட்டுமே ஆகும். அவர் சட்டத்தை பயிற்சி பெற்று தன்னை தகுதியாக்கிக் கொண்டார். ஆனால், சட்டப் படிப்பு பட்டத்தை அவர் ஒருபோதும் பெறவில்லை. இந்த உண்மையை பலர் எதிர்க்கக் கூடும். மகாத்மா காந்தி எந்தவொரு முறையான சட்டப் படிப்பு பட்டத்தையும் பெறவில்லை என்பதே உண்மை. பட்டத்துக்கும் கல்விக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

காந்தியின் வாழ்க்கையில் உண்மை மட்டுமே மையப் புள்ளியாக இருந்தது. எந்த ஒரு சூழலிலும் அவர் அதனை (உண்மை) விடவில்லை. காந்தி, நாட்டுக்காக நிறைய செய்துள்ளார். எனவேதான் அவர் தேசத் தந்தையாக போற்றப்படுகிறார். நீங்கள் காந்தியின் வாழ்க்கையை எந்த கோணத்தில் பார்த்தாலும், அதில் அவரது வாழ்க்கையில் உள்ள உண்மை மட்டுமே வெளிப்படுத்தும்.

அதேபோல் அவரது உள் கருத்துக்களை மக்களுக்கு அடையாளம் காட்டினார். அதன் முடிவில் அவர் தேசத்தின் தந்தையாக நிற்கிறார்” என்று தெரிவித்தார். இவ்வாறு ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் மகாத்மா காந்தி குறித்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மகாத்மா காந்தி, லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றுள்ளார் என்பதும், காந்தியின் புத்தகமான ‘சட்டமும் வழக்கறிஞர்களும்’ என்ற புத்தகத்தின் முதல் பிரிவிற்கு ‘காந்தி ஒரு சட்ட மாணவர்’ என்றும், 2ஆவது பிரிவிற்கு ‘காந்தி ஒரு வழக்கறிஞர்’ என்றும் பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராகுல் காந்தியின் அடுத்த நகர்வு என்ன.? நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியுமா.?

டெல்லி: மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் நேற்று (மார்ச் 23) நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, “காந்தியடிகள் சட்டப் படிப்பு பட்டம் பெற்றவர் என்ற தவறான கருத்து உள்ளது. ஆனால், மகாத்மா காந்தி ஒரு பல்கலைக்கழக பட்டம் கூட பெற்றதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

அவருடைய கல்வித் தகுதி என்பது உயர்நிலை பள்ளி, டிப்ளமோ படிப்பு மட்டுமே ஆகும். அவர் சட்டத்தை பயிற்சி பெற்று தன்னை தகுதியாக்கிக் கொண்டார். ஆனால், சட்டப் படிப்பு பட்டத்தை அவர் ஒருபோதும் பெறவில்லை. இந்த உண்மையை பலர் எதிர்க்கக் கூடும். மகாத்மா காந்தி எந்தவொரு முறையான சட்டப் படிப்பு பட்டத்தையும் பெறவில்லை என்பதே உண்மை. பட்டத்துக்கும் கல்விக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

காந்தியின் வாழ்க்கையில் உண்மை மட்டுமே மையப் புள்ளியாக இருந்தது. எந்த ஒரு சூழலிலும் அவர் அதனை (உண்மை) விடவில்லை. காந்தி, நாட்டுக்காக நிறைய செய்துள்ளார். எனவேதான் அவர் தேசத் தந்தையாக போற்றப்படுகிறார். நீங்கள் காந்தியின் வாழ்க்கையை எந்த கோணத்தில் பார்த்தாலும், அதில் அவரது வாழ்க்கையில் உள்ள உண்மை மட்டுமே வெளிப்படுத்தும்.

அதேபோல் அவரது உள் கருத்துக்களை மக்களுக்கு அடையாளம் காட்டினார். அதன் முடிவில் அவர் தேசத்தின் தந்தையாக நிற்கிறார்” என்று தெரிவித்தார். இவ்வாறு ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் மகாத்மா காந்தி குறித்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மகாத்மா காந்தி, லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றுள்ளார் என்பதும், காந்தியின் புத்தகமான ‘சட்டமும் வழக்கறிஞர்களும்’ என்ற புத்தகத்தின் முதல் பிரிவிற்கு ‘காந்தி ஒரு சட்ட மாணவர்’ என்றும், 2ஆவது பிரிவிற்கு ‘காந்தி ஒரு வழக்கறிஞர்’ என்றும் பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராகுல் காந்தியின் அடுத்த நகர்வு என்ன.? நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியுமா.?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.