ETV Bharat / bharat

கோவிட்-19 நிலவரம்: நாட்டில் புதிதாக 14,989 பேருக்கு பாதிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் 14 ஆயிரத்து 989 நபர்களுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 98 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

author img

By

Published : Mar 3, 2021, 2:48 PM IST

India
India

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் (மார்ச் 3) வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 14 ஆயிரத்து 989 நபர்களுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 98 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

கோவிட் - 19 பாதிப்பு நிலவரம்

நாட்டில், இதுவரை ஒரு கோடியே 11 லட்சத்து 39 ஆயிரத்து 516 பேர் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 126 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 346 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

இந்தியாவில் கடந்த சில நாள்களாகவே கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. கோவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றுவதில் மக்களின் அலட்சியம், உருமாறிய புதிய தொற்றுகள் உள்ளிட்டவை பாதிப்பு அதிகரிக்க காரணம் எனக் கூறப்படுகிறது.

பரிசோதனை, தடுப்பூசி நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (மார்ச் 3) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏழு லட்சத்து 85 ஆயிரத்து 220 நபர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுவரை மொத்தம் 21 கோடியே 84 லட்சத்து மூன்றாயிரத்து 277 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு கோடியே 56 லட்சத்து 20 ஆயிரத்து 749 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தற்சார்பு இந்தியாவை உருவாக்க இளைஞர்களின் நம்பிக்கை அவசியம்: பிரதமர் மோடி

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் (மார்ச் 3) வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 14 ஆயிரத்து 989 நபர்களுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 98 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

கோவிட் - 19 பாதிப்பு நிலவரம்

நாட்டில், இதுவரை ஒரு கோடியே 11 லட்சத்து 39 ஆயிரத்து 516 பேர் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 126 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 346 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

இந்தியாவில் கடந்த சில நாள்களாகவே கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. கோவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றுவதில் மக்களின் அலட்சியம், உருமாறிய புதிய தொற்றுகள் உள்ளிட்டவை பாதிப்பு அதிகரிக்க காரணம் எனக் கூறப்படுகிறது.

பரிசோதனை, தடுப்பூசி நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (மார்ச் 3) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏழு லட்சத்து 85 ஆயிரத்து 220 நபர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுவரை மொத்தம் 21 கோடியே 84 லட்சத்து மூன்றாயிரத்து 277 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு கோடியே 56 லட்சத்து 20 ஆயிரத்து 749 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தற்சார்பு இந்தியாவை உருவாக்க இளைஞர்களின் நம்பிக்கை அவசியம்: பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.