ETV Bharat / bharat

திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை - புது உத்தரவால் பீதி!

author img

By

Published : Feb 21, 2023, 10:15 AM IST

Updated : Feb 21, 2023, 11:41 AM IST

சமூகத்தின் பாரம்பரியத்தை காப்பாற்ற திருமணமாகாத பெண்கள் செல்போன் உபயோகிக்க தடை விதித்து குஜராத் தாக்கூர் சமாஜ் சமூகத்தினர் புது விதிகளை அமல்படுத்தி உள்ளனர்.

தாக்கூர் சமாஜ்
தாக்கூர் சமாஜ்

குஜராத்: பன்ஸ்கந்தா மாவட்டம் லுன்சேலா நகரில் குஜராத்தி சாமியார் சந்த் ஸ்ரீ சாதாராம் பாபாவின் சிலை நிறுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாக்கூர் சமூகத்தை சேர்ந்த மக்கள் ஒன்று கூடி தங்க சமூக பாரம்பரியத்தை பாதுகாப்பது குறித்த 11 வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டனர்.

இதில், திருமணமாகாத தாக்கூர் சமூக பெண்கள், செல்போன் உபயோகிக்க தடை விதிப்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் திருமண விழாக்களில் டி.ஜே(DJ) பார்ட்டிகளை தடை செய்யப்பட்டது. திருமண பரிசுகளுக்கு பதிலாக பணம் வழங்குவது, தம்பதிகளின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான பொருட்களை மட்டும் திருமண பரிசாக வழங்குவது என தெரிவிக்கப்பட்டது.

திருமணம் மற்றும் நிச்சயதார்த்த நிகழ்வுகளில் 11 பேர் மட்டும் கலந்து கொள்ள வேண்டும், திருமணத்தின் போது 51 நபர்களுக்கு மட்டும் அனுமதி, ஜாதி வாரியாக சமூக திருமணங்கள் நடத்தப்பட வேண்டும், புதுமண தம்பதிகள் தங்கள் உறவினர்களை சந்திக்கச் செல்லும் போது பணம் வழங்கக் கூடாது, திருமணம் மற்றும் நிச்சயதார்த்ததை நிறுத்துபவர்களுக்கு தண்டனை கிடையாது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

மேலும் சமூகத்தின் பெருமையை காக்கும் வகையில் திருமணமாகாத பெண்கள் இனி செல்போன் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டது. போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்க போதை ஒழிப்பு முகாம்கள், ஒவ்வொரு கிராமத்தில் பள்ளி செல்லும் பெண்கள் எளிதாக பயணம் மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த விதிமுறைகளுக்கான அட்டவணையை காங்கிரஸ் எம்.எல்.ஏ. கனீபன் தாக்கூர் வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், "விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து குறுகிய காலத்தில் 40 லட்ச ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தாக்கூர் சமாஜ் உறுப்பினர்கள் விதிகளை பின்பற்றுவார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: துருக்கி, சிரியாவை துரத்தும் அவலம் - மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

குஜராத்: பன்ஸ்கந்தா மாவட்டம் லுன்சேலா நகரில் குஜராத்தி சாமியார் சந்த் ஸ்ரீ சாதாராம் பாபாவின் சிலை நிறுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாக்கூர் சமூகத்தை சேர்ந்த மக்கள் ஒன்று கூடி தங்க சமூக பாரம்பரியத்தை பாதுகாப்பது குறித்த 11 வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டனர்.

இதில், திருமணமாகாத தாக்கூர் சமூக பெண்கள், செல்போன் உபயோகிக்க தடை விதிப்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் திருமண விழாக்களில் டி.ஜே(DJ) பார்ட்டிகளை தடை செய்யப்பட்டது. திருமண பரிசுகளுக்கு பதிலாக பணம் வழங்குவது, தம்பதிகளின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான பொருட்களை மட்டும் திருமண பரிசாக வழங்குவது என தெரிவிக்கப்பட்டது.

திருமணம் மற்றும் நிச்சயதார்த்த நிகழ்வுகளில் 11 பேர் மட்டும் கலந்து கொள்ள வேண்டும், திருமணத்தின் போது 51 நபர்களுக்கு மட்டும் அனுமதி, ஜாதி வாரியாக சமூக திருமணங்கள் நடத்தப்பட வேண்டும், புதுமண தம்பதிகள் தங்கள் உறவினர்களை சந்திக்கச் செல்லும் போது பணம் வழங்கக் கூடாது, திருமணம் மற்றும் நிச்சயதார்த்ததை நிறுத்துபவர்களுக்கு தண்டனை கிடையாது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

மேலும் சமூகத்தின் பெருமையை காக்கும் வகையில் திருமணமாகாத பெண்கள் இனி செல்போன் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டது. போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்க போதை ஒழிப்பு முகாம்கள், ஒவ்வொரு கிராமத்தில் பள்ளி செல்லும் பெண்கள் எளிதாக பயணம் மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த விதிமுறைகளுக்கான அட்டவணையை காங்கிரஸ் எம்.எல்.ஏ. கனீபன் தாக்கூர் வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், "விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து குறுகிய காலத்தில் 40 லட்ச ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தாக்கூர் சமாஜ் உறுப்பினர்கள் விதிகளை பின்பற்றுவார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: துருக்கி, சிரியாவை துரத்தும் அவலம் - மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Last Updated : Feb 21, 2023, 11:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.