ETV Bharat / bharat

கார்- டிரக் நேருக்கு நேர் மோதல்: 10 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Jun 16, 2021, 12:14 PM IST

குஜராத்: ஆனந்த் மாவட்டத்தில் இன்று (ஜூன் 16) காலை கார்- டிரக் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.

கார்- டிரக் நேருக்கு நேர் மோதல்
கார்- டிரக் நேருக்கு நேர் மோதல்

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் தாராபூர் நெடுஞ்சாலையில் கடந்த சில ஆண்டுகளாக சாலை புனரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனால் அங்கு சாலை விபத்து அதிகமாக நடைபெறுகிறது எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (ஜூன் 16) காலை சூரத்திலிருந்து- சௌராஷ்டிரா நோக்கி டிரக் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென டிரக் ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.

கார்- டிரக் நேருக்கு நேர் மோதல்

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: 'ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களுக்கு விசா'

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் தாராபூர் நெடுஞ்சாலையில் கடந்த சில ஆண்டுகளாக சாலை புனரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனால் அங்கு சாலை விபத்து அதிகமாக நடைபெறுகிறது எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (ஜூன் 16) காலை சூரத்திலிருந்து- சௌராஷ்டிரா நோக்கி டிரக் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென டிரக் ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.

கார்- டிரக் நேருக்கு நேர் மோதல்

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: 'ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களுக்கு விசா'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.