கர்நாடகா மாநிலம், பெங்களூரு பெல்லந்தூர் ஏரிக்கு அருகே உள்ள குப்பை கிடங்கில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. உடனே அருகிலுள்ள குடியிருப்புவாசிகள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்தத் தகவலின் அடிப்படையில் சர்ஜாப்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ கட்டுகடங்காமல் பரவியதால் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, இரவு முழுவதும் தீயை அணைக்கும் பணி தொடர்ந்தது. அதையடுத்து இன்று (மார்ச்-5) காலை தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி காவல்துறையினர், நேற்றிரவு 11 மணியளவில் யாரோ குப்பைக்கு தீ வைத்துள்ளனர். அதுகுறித்து அதிகாலை 1 மணிக்கு எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மலைப்பகுதியில் தீ விபத்து: புகை மூட்டத்தால் மக்கள் அவதி!