ETV Bharat / bharat

60 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம் - பாலியல் வன்புணர்வு

டெல்லியில் 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக 30 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

60 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்
60 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்
author img

By

Published : Jun 15, 2021, 3:09 AM IST

டெல்லி: டெல்லியின் புது அசோக் நகர் பகுதியில் 60 வயதான பெண் ஒருவர் நேற்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலையுண்டார்.

60வயதான மூதாட்டி ஒருவர் தனது மகன் மற்றும் உறவினருடன் டல்லூபுரா கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்துவந்தார்.

இந்நிலையில் நேற்று அந்த மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்டார்.

இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அவரது மகன் சம்பவம் நடந்தபோது அங்கு இல்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இச்சம்பவம் குறித்து கொலை செய்யப்பட்டவரின் மகன் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், தனது தாயார் தரையில் நிர்வாண நிலையில் கிடந்ததாகவும், அவரது தொண்டை கூர்மையான பொருளால் வெட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோல் வடக்கு டெல்லியின் புராரியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு 65 வயதான பெண் ஒருவர் தனது தொண்டை அறுப்பு மற்றும் இடது காலில் சில தீக்காயங்களுடன் காணப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

கொடூரமான இச்சம்பவம் நடந்த ஒரு நாளுக்குப் பிறகு, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட வீட்டை ஒட்டிய 30 வயது இளைஞரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். மேலும் மூதாட்டியின் உடற்கூராய்வில் விரிவான அறிக்கை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டாரா இல்லையா என்பது தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

டெல்லி: டெல்லியின் புது அசோக் நகர் பகுதியில் 60 வயதான பெண் ஒருவர் நேற்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலையுண்டார்.

60வயதான மூதாட்டி ஒருவர் தனது மகன் மற்றும் உறவினருடன் டல்லூபுரா கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்துவந்தார்.

இந்நிலையில் நேற்று அந்த மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்டார்.

இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அவரது மகன் சம்பவம் நடந்தபோது அங்கு இல்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இச்சம்பவம் குறித்து கொலை செய்யப்பட்டவரின் மகன் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், தனது தாயார் தரையில் நிர்வாண நிலையில் கிடந்ததாகவும், அவரது தொண்டை கூர்மையான பொருளால் வெட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோல் வடக்கு டெல்லியின் புராரியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு 65 வயதான பெண் ஒருவர் தனது தொண்டை அறுப்பு மற்றும் இடது காலில் சில தீக்காயங்களுடன் காணப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

கொடூரமான இச்சம்பவம் நடந்த ஒரு நாளுக்குப் பிறகு, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட வீட்டை ஒட்டிய 30 வயது இளைஞரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். மேலும் மூதாட்டியின் உடற்கூராய்வில் விரிவான அறிக்கை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டாரா இல்லையா என்பது தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.