ETV Bharat / bharat

திரெளபதி முர்மு குடியரசுத் தலைவர் ஆனது அனைவருக்கும் ஒரு உத்வேகம் - முர்முவின் உறவினர்கள் மகிழ்ச்சி!

author img

By

Published : Jul 22, 2022, 8:35 PM IST

நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பொறுப்பேற்க உள்ள நிலையில், அவரது வெற்றி அனைவருக்கும் ஒரு உத்வேகத்தை அளிக்கிறது என முர்முவின் உறவினர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

திரெளபதி முர்மு குடியரசுத்தலைவர் ஆனது அனைவருக்கும் ஒரு உத்வேகம் - முர்முவின் உறவினர்கள் மகிழ்ச்சி!
திரெளபதி முர்மு குடியரசுத்தலைவர் ஆனது அனைவருக்கும் ஒரு உத்வேகம் - முர்முவின் உறவினர்கள் மகிழ்ச்சி!

மயூர்பஞ்ச் (ஒடிசா): நாட்டின் 15 ஆவது குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஜூலை 18 அன்று நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று நான்கு சுற்றுகளாக எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரெளபதி முர்மு 2,824 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் நாட்டின் 15 வது குடியரசுத்தலைவராக திரௌபதி முர்மு வருகிற ஜூலை 25 அன்று பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து திரௌபதி முர்முவின் உறவினர் சாக்ரோமி துடு கூறுகையில், “பட்டியலிடப்பட்ட பழங்குடி (எஸ்டி) சமூகத்தைச் சேர்ந்த முதல் நபர் இந்தியாவின் குடியரசுத்தலைவர் என்பதால், சந்தாலி (Santhali) சமூகத்தினருக்கு இது மிகப்பெரிய பெருமையாகும். அவரது வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது மற்றும் அனைவருக்கும் உத்வேகம் அளித்தது" என தெரிவித்தார்.

திரௌபதி முர்முவின் உறவினர் சாக்ரோமி துடு
திரௌபதி முர்முவின் உறவினர் சாக்ரோமி துடு

அதேபோல் முர்முவின் சகோதரர் தாரினிசென் துடு, "எனது சகோதரி பழங்குடியினப் பெண். குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் சிறுவயதில் இருந்தே மிகவும் போராடியுள்ளார். இது அனைவருக்கும் ஒரு உத்வேகம்" என கூறினார்.

இதையும் படிங்க: நாட்டின் 15ஆவது குடியரசுத்தலைவர் ஆகிறார் திரெளபதி முர்மு - பிரதமர், முதலமைச்சர் வாழ்த்து!

மயூர்பஞ்ச் (ஒடிசா): நாட்டின் 15 ஆவது குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஜூலை 18 அன்று நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று நான்கு சுற்றுகளாக எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரெளபதி முர்மு 2,824 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் நாட்டின் 15 வது குடியரசுத்தலைவராக திரௌபதி முர்மு வருகிற ஜூலை 25 அன்று பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து திரௌபதி முர்முவின் உறவினர் சாக்ரோமி துடு கூறுகையில், “பட்டியலிடப்பட்ட பழங்குடி (எஸ்டி) சமூகத்தைச் சேர்ந்த முதல் நபர் இந்தியாவின் குடியரசுத்தலைவர் என்பதால், சந்தாலி (Santhali) சமூகத்தினருக்கு இது மிகப்பெரிய பெருமையாகும். அவரது வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது மற்றும் அனைவருக்கும் உத்வேகம் அளித்தது" என தெரிவித்தார்.

திரௌபதி முர்முவின் உறவினர் சாக்ரோமி துடு
திரௌபதி முர்முவின் உறவினர் சாக்ரோமி துடு

அதேபோல் முர்முவின் சகோதரர் தாரினிசென் துடு, "எனது சகோதரி பழங்குடியினப் பெண். குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் சிறுவயதில் இருந்தே மிகவும் போராடியுள்ளார். இது அனைவருக்கும் ஒரு உத்வேகம்" என கூறினார்.

இதையும் படிங்க: நாட்டின் 15ஆவது குடியரசுத்தலைவர் ஆகிறார் திரெளபதி முர்மு - பிரதமர், முதலமைச்சர் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.