ETV Bharat / bharat

தேசியக்கொடி மீது பாஜக கொடி... இது சரியா? - கேள்வி எழுப்பும் காங்கிரஸ்

author img

By

Published : Aug 23, 2021, 10:27 AM IST

கல்யாண் சிங் மறைவின்போது, அவர் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடியின் பாதியின்கீழ் பாரதிய ஜனதா கட்சியின் கொடி வைக்கப்பட்டது குறித்து அக்கட்சியிடம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

தேசியக்கொடி மீது பாஜக கொடி
தேசியக்கொடி மீது பாஜக கொடி

டெல்லி: வயது மூப்பு, பல்வேறு நோய்கள் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதியுற்ற கல்யாண் சிங்குக்கு கடந்த மாதம் 4ஆம் தேதி திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டுவந்த நிலையில், ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று காலமானார். இவர் உத்தரப் பிரதேச முதலமைச்சராகவும், ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் பதவி வகித்தவர். அயோத்தி ராம ஜென்ம பூமி போராட்டம் வலுப்பெற்றபோது உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இவர்தான் இருந்தார்.

தேசியக்கொடி மீது பாஜக கொடி
தேசியக்கொடி மீது பாஜக கொடி

இந்தியக் கொடியின் மீது கட்சி கொடியை வைப்பது சரியா

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சேவகராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கல்யாண் சிங்கின் பேச்சு, பாபர் மசூதி விவகாரத்தில் பிரிந்திருந்த கரசேவகர்களை ஒன்றிணைத்தது. 1991ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 221 இடங்களைப் பிடிக்க முக்கியக் காரணமாக இருந்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கல்யாண் சிங் மறைவின்போது நிகழ்ந்த ஒரு சம்பவம் குறித்து புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் காங்கிரசின் இளைஞர் பிரிவுத் தலைவர் ஸ்ரீனிவாஸ். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

தேசியக்கொடி மீது பாஜக கொடி
தேசியக்கொடி மீது பாஜக கொடி

அதில், மறைந்த கல்யாண் சிங்கின் உடல் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டுள்ளது. அதன் பாதிக்குக் கீழ் பாஜக கொடி வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பதிவில் ஸ்ரீனிவாஸ், 'புதிய இந்தியாவில் இந்தியக் கொடியின் மீது கட்சி கொடியை வைப்பது சரியா' எனக் கேள்வியெழுப்பியுள்ளார். தனது மற்றொரு பதிவில், இது பாரதப் பிரதமரால் வலியுறுத்தப்பட்டதா எனவும் வினா தொடுத்துள்ளார்.

தேசியக்கொடி மீது பாஜக கொடி
தேசியக்கொடி மீது பாஜக கொடி

நாட்டின் கௌரவத்திற்கு எதிரானது

அதிகாரப்பூர்வ இளைஞர் காங்கிரஸ் தனது ட்விட்டரில், தேசியக்கொடியை அவமதிப்பதை இந்தியா ஏற்றுக்கொள்ளாது எனப் பதிவிடப்பட்டுள்ளது. இதேபோல், சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் கான்ஷியாம் திவாரியும் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்தப் புகைப்படத்தைப் பதிவேற்றி,

"நாட்டைவிட கட்சிப் பெரிது. கட்சியின் கொடியைவிட மூவர்ணக்கொடி பெரிது. இது பாஜகவின் வழக்கம்: வருத்தம் இல்லை, செய்த தவறுக்கு மனம் திருந்துவதில்லை, கவலை இல்லை, விசனமில்லை" என்றார்.

தேசியக்கொடி மீது பாஜக கொடி
தேசியக்கொடி மீது பாஜக கொடி

நாட்டின் கௌரவத்திற்கு எதிரான அவமதிப்புத் தடுப்புச் சட்டப்பிரிவு-2 சொல்வது:

  • இந்திய தேசியக்கொடி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக அவமரியாதை செய்வது குற்றம்
  • எந்தவொரு பொது இடத்திலோ வேறு ஏதாவது இடத்திலோ தேசியக்கொடியையோ-அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதிகளையோ எரித்தல், சிதைத்தல், அவதூறு செய்தல், கிழித்தல், மிதித்தல், அவமானப்படுத்துதல் (சொற்களாலோ, பேச்சு அல்லது எழுத்துகளாலோ, செயல்களாலோ) போன்றவற்றில் ஈடுபடுவது குற்றமாகும்.
    தேசியக்கொடி மீது பாஜக கொடி
    தேசியக்கொடி மீது பாஜக கொடி

இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.

இதையும் படிங்க: ’மக்கள் நலனையே மந்திரமாகக் கொண்டிருந்தவர் கல்யாண் சிங்’ - பிரதமர் மோடி

டெல்லி: வயது மூப்பு, பல்வேறு நோய்கள் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதியுற்ற கல்யாண் சிங்குக்கு கடந்த மாதம் 4ஆம் தேதி திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டுவந்த நிலையில், ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று காலமானார். இவர் உத்தரப் பிரதேச முதலமைச்சராகவும், ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் பதவி வகித்தவர். அயோத்தி ராம ஜென்ம பூமி போராட்டம் வலுப்பெற்றபோது உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இவர்தான் இருந்தார்.

தேசியக்கொடி மீது பாஜக கொடி
தேசியக்கொடி மீது பாஜக கொடி

இந்தியக் கொடியின் மீது கட்சி கொடியை வைப்பது சரியா

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சேவகராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கல்யாண் சிங்கின் பேச்சு, பாபர் மசூதி விவகாரத்தில் பிரிந்திருந்த கரசேவகர்களை ஒன்றிணைத்தது. 1991ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 221 இடங்களைப் பிடிக்க முக்கியக் காரணமாக இருந்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கல்யாண் சிங் மறைவின்போது நிகழ்ந்த ஒரு சம்பவம் குறித்து புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் காங்கிரசின் இளைஞர் பிரிவுத் தலைவர் ஸ்ரீனிவாஸ். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

தேசியக்கொடி மீது பாஜக கொடி
தேசியக்கொடி மீது பாஜக கொடி

அதில், மறைந்த கல்யாண் சிங்கின் உடல் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டுள்ளது. அதன் பாதிக்குக் கீழ் பாஜக கொடி வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பதிவில் ஸ்ரீனிவாஸ், 'புதிய இந்தியாவில் இந்தியக் கொடியின் மீது கட்சி கொடியை வைப்பது சரியா' எனக் கேள்வியெழுப்பியுள்ளார். தனது மற்றொரு பதிவில், இது பாரதப் பிரதமரால் வலியுறுத்தப்பட்டதா எனவும் வினா தொடுத்துள்ளார்.

தேசியக்கொடி மீது பாஜக கொடி
தேசியக்கொடி மீது பாஜக கொடி

நாட்டின் கௌரவத்திற்கு எதிரானது

அதிகாரப்பூர்வ இளைஞர் காங்கிரஸ் தனது ட்விட்டரில், தேசியக்கொடியை அவமதிப்பதை இந்தியா ஏற்றுக்கொள்ளாது எனப் பதிவிடப்பட்டுள்ளது. இதேபோல், சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் கான்ஷியாம் திவாரியும் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்தப் புகைப்படத்தைப் பதிவேற்றி,

"நாட்டைவிட கட்சிப் பெரிது. கட்சியின் கொடியைவிட மூவர்ணக்கொடி பெரிது. இது பாஜகவின் வழக்கம்: வருத்தம் இல்லை, செய்த தவறுக்கு மனம் திருந்துவதில்லை, கவலை இல்லை, விசனமில்லை" என்றார்.

தேசியக்கொடி மீது பாஜக கொடி
தேசியக்கொடி மீது பாஜக கொடி

நாட்டின் கௌரவத்திற்கு எதிரான அவமதிப்புத் தடுப்புச் சட்டப்பிரிவு-2 சொல்வது:

  • இந்திய தேசியக்கொடி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக அவமரியாதை செய்வது குற்றம்
  • எந்தவொரு பொது இடத்திலோ வேறு ஏதாவது இடத்திலோ தேசியக்கொடியையோ-அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதிகளையோ எரித்தல், சிதைத்தல், அவதூறு செய்தல், கிழித்தல், மிதித்தல், அவமானப்படுத்துதல் (சொற்களாலோ, பேச்சு அல்லது எழுத்துகளாலோ, செயல்களாலோ) போன்றவற்றில் ஈடுபடுவது குற்றமாகும்.
    தேசியக்கொடி மீது பாஜக கொடி
    தேசியக்கொடி மீது பாஜக கொடி

இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.

இதையும் படிங்க: ’மக்கள் நலனையே மந்திரமாகக் கொண்டிருந்தவர் கல்யாண் சிங்’ - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.