ETV Bharat / bharat

ஜார்க்கண்ட்டில் அரசியல் நெருக்கடி... சொகுசு விடுதிக்கு பயணமாகும் எம்எல்ஏக்கள்...

ஜார்க்கண்ட் மாநிலத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக தகவல் வெளியான நிலையில், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் எம்எல்ஏக்களை ராஞ்சியில் இருந்து வெறியேற்றி நட்சத்திர விடுதியில் தங்க வைத்துள்ளார்.

author img

By

Published : Aug 27, 2022, 7:33 PM IST

ranchi
ranchi

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் இணைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், முதலமைச்சருமான ஹேமந்த் சோரன் மீது நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக பாஜகவினர் புகார் அளித்தனர்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மீறியதால், சோரனை எம்எல்ஏ பதிவியிலிருந்து தகுதி நீக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியது. அதன்படி, ஹேமந்த் சோரனை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதனால், சோரனின் முதலமைச்சர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஹேமந்த் சோரன் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர். தன் மீதான ஊழல் புகார் பாஜகவினரின் திட்டமிட்ட சதி என்றும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கும் பாஜகதான் காரணம் என்றும் சோரன் குற்றம் சாட்டியிருந்தார். இதனிடையே எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இதனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களை பாதுகாப்பதில் சோரன் தீவிரமாக உள்ளார். ஹேமந்த் சோரன் எம்எல்ஏக்களை மூன்று பேருந்துகளில் ஏற்றிக் கொண்டு முதலமைச்சர் மாளிகையிலிருந்து வெளியேறினார். அவர்கள் ராஞ்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முதல் பேருந்தில் எம்எல்ஏக்களுடன் சென்ற சோரன், இன்முகத்தோடு செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ஆட்சியைக் கவிழ்க்க பாஜக தீவிரமாக முயற்சித்து வருவதால், சோரன் எம்எல்ஏக்களை பாதுகாக்கும் முயற்சியில் அதைவிட தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிங்க:பாஜகவின் அடுத்த குறி ஹேமந்த் சோரன்... தகுதியை நீக்க தேர்தல் ஆணையம் மூலம் பாஜக வேலை.. சோரன் குற்றச்சாட்டு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் இணைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், முதலமைச்சருமான ஹேமந்த் சோரன் மீது நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக பாஜகவினர் புகார் அளித்தனர்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மீறியதால், சோரனை எம்எல்ஏ பதிவியிலிருந்து தகுதி நீக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியது. அதன்படி, ஹேமந்த் சோரனை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதனால், சோரனின் முதலமைச்சர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஹேமந்த் சோரன் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர். தன் மீதான ஊழல் புகார் பாஜகவினரின் திட்டமிட்ட சதி என்றும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கும் பாஜகதான் காரணம் என்றும் சோரன் குற்றம் சாட்டியிருந்தார். இதனிடையே எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இதனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களை பாதுகாப்பதில் சோரன் தீவிரமாக உள்ளார். ஹேமந்த் சோரன் எம்எல்ஏக்களை மூன்று பேருந்துகளில் ஏற்றிக் கொண்டு முதலமைச்சர் மாளிகையிலிருந்து வெளியேறினார். அவர்கள் ராஞ்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முதல் பேருந்தில் எம்எல்ஏக்களுடன் சென்ற சோரன், இன்முகத்தோடு செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ஆட்சியைக் கவிழ்க்க பாஜக தீவிரமாக முயற்சித்து வருவதால், சோரன் எம்எல்ஏக்களை பாதுகாக்கும் முயற்சியில் அதைவிட தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிங்க:பாஜகவின் அடுத்த குறி ஹேமந்த் சோரன்... தகுதியை நீக்க தேர்தல் ஆணையம் மூலம் பாஜக வேலை.. சோரன் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.