ETV Bharat / bharat

கோழிகள் மூலம் கோவிட்-19 பரவுகிறதா?

போபால்: ப்ராய்லர் கோழிகளிலிருந்து கரோனா வைரஸ் பரவுவதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுவரும் செய்திகள் ஆதாரமற்றவை என்று மத்தியப் பிரதேசத்தின் கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது.

author img

By

Published : Jun 20, 2020, 8:11 PM IST

mp-govt-rubbishes-reports-of-covid-19-found-in-chicken
mp-govt-rubbishes-reports-of-covid-19-found-in-chicken

உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. நாளுக்குக் நாள் வேகமடைந்து வரும் அதன் பரவலைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் அது தொடர்பான வதந்திகள் பரப்பப்படுகின்றன.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் வளர்க்கப்படும் ப்ராய்லர் கோழிகளுக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பதை சுகாதாரத் துறை பரிசோதித்து, உறுதிப்படுத்தி உள்ளதாக கடந்த சில நாள்களாக சமூக வலைத்தளங்களில் கருத்து பரவி வருகிறது. இது அம்மாநில மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கால்நடை வளர்ப்புத் துறை இயக்குநர் ஆர்.கே. ரோக்டே, "கோழி முற்றிலும் பாதுகாப்பானது" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள கடிதத்தில், "போரோபால், குவாலியர், தேவாஸ், இந்தூர், உஜ்ஜைன், ரத்லம், பத்நகர், செஹோர், பார்வானி மற்றும் மோவ் ஆகிய இடங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் எவ்விதமான சோதனைகளையும் சுகாதாரத் துறை மேற்கொள்ளவில்லை. மாநிலத்தில் எந்த இடத்திலும் இதுபோன்ற மாதிரிகள் மேற்கொள்ளப்படவில்லை. கோழி பறவைகள் மத்தியில் கரோனா வைரஸ் தொற்றுக்கான எந்த அறிகுறியும் இதுவரை காணப்படவில்லை.

கோழிகளின் மூலமாக கரோனா பரவுகிறதென பரப்பப்பட்டு வரும் செய்தி முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது. கறிக் கோழி பண்ணைகளை மூடுவது குறித்து சுகாதாரத் துறையால் எந்த வழிகாட்டுதல்களும் எச்சரிக்கை கடிதங்களும் வெளியிடப்படவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. நாளுக்குக் நாள் வேகமடைந்து வரும் அதன் பரவலைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் அது தொடர்பான வதந்திகள் பரப்பப்படுகின்றன.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் வளர்க்கப்படும் ப்ராய்லர் கோழிகளுக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பதை சுகாதாரத் துறை பரிசோதித்து, உறுதிப்படுத்தி உள்ளதாக கடந்த சில நாள்களாக சமூக வலைத்தளங்களில் கருத்து பரவி வருகிறது. இது அம்மாநில மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கால்நடை வளர்ப்புத் துறை இயக்குநர் ஆர்.கே. ரோக்டே, "கோழி முற்றிலும் பாதுகாப்பானது" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள கடிதத்தில், "போரோபால், குவாலியர், தேவாஸ், இந்தூர், உஜ்ஜைன், ரத்லம், பத்நகர், செஹோர், பார்வானி மற்றும் மோவ் ஆகிய இடங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் எவ்விதமான சோதனைகளையும் சுகாதாரத் துறை மேற்கொள்ளவில்லை. மாநிலத்தில் எந்த இடத்திலும் இதுபோன்ற மாதிரிகள் மேற்கொள்ளப்படவில்லை. கோழி பறவைகள் மத்தியில் கரோனா வைரஸ் தொற்றுக்கான எந்த அறிகுறியும் இதுவரை காணப்படவில்லை.

கோழிகளின் மூலமாக கரோனா பரவுகிறதென பரப்பப்பட்டு வரும் செய்தி முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது. கறிக் கோழி பண்ணைகளை மூடுவது குறித்து சுகாதாரத் துறையால் எந்த வழிகாட்டுதல்களும் எச்சரிக்கை கடிதங்களும் வெளியிடப்படவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.