ETV Bharat / bharat

தாயைக் கொன்று உடலை சாக்கடையில் வீசிய மகன்

author img

By

Published : Feb 24, 2020, 9:53 AM IST

போபால்: தொல்லை கொடுத்த காரணத்தால் தாயைக் கொன்ற மகன், அவரது உடலை சாக்கடையில் வீசிய சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Murder
Murder

மத்தியப் பிரதேச மாநிலம் காந்துவா மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது இளைஞர் ஒருவர் தனது தாயைக் கொன்று உடலை சாக்கடையில் வீசியுள்ளார். தாய் தொல்லை கொடுத்த காரணத்தால் மகன் கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தாயை சரமாரியாக மகன் தாக்கியுள்ளார்.

சம்பவ இடத்திலேயே தாய் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரின் உடலை நான்கு நாள்களுக்கு வீட்டிலேயே மகன் மறைத்து வைத்துள்ளார். பின்னர் உடலில் இருந்து துர்நாற்றம் வரத்தொடங்கியதையடுத்து, உடலை சாக்கடையில் வீசியுள்ளார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாக, அதனைக் காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, தொலைக்காட்சியில் வரும் நாடகத்தைப் பார்த்து இந்தக் கொலையை செய்ததாக மகன் ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பல்கலைக்கழகங்களில் பாலியல் வேட்டை: இந்திய பல்கலைக்கழகங்களின் மறைக்கப்பட்ட பக்கம்

மத்தியப் பிரதேச மாநிலம் காந்துவா மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது இளைஞர் ஒருவர் தனது தாயைக் கொன்று உடலை சாக்கடையில் வீசியுள்ளார். தாய் தொல்லை கொடுத்த காரணத்தால் மகன் கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தாயை சரமாரியாக மகன் தாக்கியுள்ளார்.

சம்பவ இடத்திலேயே தாய் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரின் உடலை நான்கு நாள்களுக்கு வீட்டிலேயே மகன் மறைத்து வைத்துள்ளார். பின்னர் உடலில் இருந்து துர்நாற்றம் வரத்தொடங்கியதையடுத்து, உடலை சாக்கடையில் வீசியுள்ளார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாக, அதனைக் காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, தொலைக்காட்சியில் வரும் நாடகத்தைப் பார்த்து இந்தக் கொலையை செய்ததாக மகன் ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பல்கலைக்கழகங்களில் பாலியல் வேட்டை: இந்திய பல்கலைக்கழகங்களின் மறைக்கப்பட்ட பக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.