ETV Bharat / bharat

'நாங்கள் சாதித்துவிட்டோம் அப்பா!' - மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் மகன் உருக்கம்

author img

By

Published : Oct 25, 2019, 6:47 PM IST

Updated : Oct 25, 2019, 6:58 PM IST

மும்பை: நாங்கள் சாதித்துவிட்டோம் அப்பா என்று தனது தந்தையை நினைத்து அவரது மகன் ரித்தேஷ் தேஷ்முக் ட்விட்டரில் பதிவிட்டது தற்போது வைரலாகிவருகிறது.

Maharashtra Election Result 2019: "We Did It Pappa": Riteish Deshmukh Celebrates Brothers' Latur Win

இவர் இவ்வாறு பதிவிட்டதற்கு வலுவான ஒரு காரணமும் உள்ளது. மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ரித்தேஷ். இவர் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். விலாஸ்ராவ் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவி வகித்தபோதுதான், மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. நாட்டை உலுக்கிய இந்தத் தாக்குதலை மையமாக வைத்து, பிரபல தெலுங்கு பட இயக்குநர் ராம்கோபால் வர்மா படமாக்கினார்.

அப்படத்துக்கு விலாஸ்ராவ் தேஷ்முக் உதவினார் என்றும் தனது மகனுக்கு வாய்ப்பு கேட்டார் எனவும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாரதிய ஜனதாவினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனை விலாஸ்ராவ் திட்டவட்டமாக மறுத்தார்.

மேலும் மும்பைத் தாக்குதல் சம்பவத்தால் தனது பதவியையும் இழந்தார். தற்போது அவர் உயிருடன் இல்லை. இந்த நிலையில் அவரது மகன்கள் மூன்று பேரும் தற்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர்.

ரித்தேஷின் அண்ணன் அமித் மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளார். அவரின் தம்பி தீரஜ் எம்.எல்.ஏ. ஆவது இது முதல் முறை. இந்த நிலையில்தான் நாங்கள் சாதித்துவிட்டோம் அப்பா என்று ரித்தேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.

Maharashtra Election Result 2019:
ரித்தேஷ் தேஷ்முக் ட்வீட்
பாரதிய ஜனதா தலைவர்கள் இந்தத் தேர்தலிலும் மும்பை தாக்குதல் பற்றி பேசினர். அப்போது விலாஸ்ராவ் குறித்தும் பட சர்ச்சை குறித்தும் மீண்டும் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் அவரின் மகன்கள் மூன்று பேருக்கும் மகாராஷ்டிரா மக்கள் வெற்றியைப் பரிசளித்துள்ளனர். முன்னதாக இந்தப்படச் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த ரித்தேஷ், தன் தந்தை தனது படவாய்ப்புக்காக யாரிடமும் பேசியது கிடையாது. அதற்காக தான் பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: மனதை உருக்கும் பள்ளிக் குழந்தைகள் - தண்ணீருக்காக 14 கி.மீ. ரயில் பயணம்!

இவர் இவ்வாறு பதிவிட்டதற்கு வலுவான ஒரு காரணமும் உள்ளது. மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ரித்தேஷ். இவர் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். விலாஸ்ராவ் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவி வகித்தபோதுதான், மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. நாட்டை உலுக்கிய இந்தத் தாக்குதலை மையமாக வைத்து, பிரபல தெலுங்கு பட இயக்குநர் ராம்கோபால் வர்மா படமாக்கினார்.

அப்படத்துக்கு விலாஸ்ராவ் தேஷ்முக் உதவினார் என்றும் தனது மகனுக்கு வாய்ப்பு கேட்டார் எனவும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாரதிய ஜனதாவினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனை விலாஸ்ராவ் திட்டவட்டமாக மறுத்தார்.

மேலும் மும்பைத் தாக்குதல் சம்பவத்தால் தனது பதவியையும் இழந்தார். தற்போது அவர் உயிருடன் இல்லை. இந்த நிலையில் அவரது மகன்கள் மூன்று பேரும் தற்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர்.

ரித்தேஷின் அண்ணன் அமித் மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளார். அவரின் தம்பி தீரஜ் எம்.எல்.ஏ. ஆவது இது முதல் முறை. இந்த நிலையில்தான் நாங்கள் சாதித்துவிட்டோம் அப்பா என்று ரித்தேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.

Maharashtra Election Result 2019:
ரித்தேஷ் தேஷ்முக் ட்வீட்
பாரதிய ஜனதா தலைவர்கள் இந்தத் தேர்தலிலும் மும்பை தாக்குதல் பற்றி பேசினர். அப்போது விலாஸ்ராவ் குறித்தும் பட சர்ச்சை குறித்தும் மீண்டும் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் அவரின் மகன்கள் மூன்று பேருக்கும் மகாராஷ்டிரா மக்கள் வெற்றியைப் பரிசளித்துள்ளனர். முன்னதாக இந்தப்படச் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த ரித்தேஷ், தன் தந்தை தனது படவாய்ப்புக்காக யாரிடமும் பேசியது கிடையாது. அதற்காக தான் பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: மனதை உருக்கும் பள்ளிக் குழந்தைகள் - தண்ணீருக்காக 14 கி.மீ. ரயில் பயணம்!

Last Updated : Oct 25, 2019, 6:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.