ETV Bharat / bharat

புதுச்சேரியில் தியாகிகள் தினம் அனுசரிப்பு! - உரிமைப் போரில் உயர்நீத்த தொழிலாளர்கள்

புதுச்சேரி: தொழிலாளர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், இன்று தொழிலாளர்களின் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

 labours Martyrs Day observance in Pondicherry
labours Martyrs Day observance in Pondicherry
author img

By

Published : Jul 30, 2020, 3:37 PM IST

பிரெஞ்சு ஆட்சியில், புதுச்சேரியில் எட்டு மணி நேர வேலைக்கோரி போராடிய, பஞ்சாலைத் தொழிலாளர்கள் மீது 1936-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் நாள் பிரெஞ்சு ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இதில் 12 பஞ்சாலைத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உரிமைப் போரில் உயர்நீத்த தொழிலாளர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 30-ஆம் தேதியை தியாகிகள் தினமாக கம்யூனிஸ்ட் கட்சியினர் கடைப்பிடித்து வருகின்றனர்.

அதன்படி இன்று (ஜூலை30) தியாகிகள் தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. புதுச்சேரி-கடலூர் சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தியாகிகள் நினைவிடத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், பல்வேறு தொழிற்சங்கத்தினரும் தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

பிரெஞ்சு ஆட்சியில், புதுச்சேரியில் எட்டு மணி நேர வேலைக்கோரி போராடிய, பஞ்சாலைத் தொழிலாளர்கள் மீது 1936-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் நாள் பிரெஞ்சு ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இதில் 12 பஞ்சாலைத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உரிமைப் போரில் உயர்நீத்த தொழிலாளர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 30-ஆம் தேதியை தியாகிகள் தினமாக கம்யூனிஸ்ட் கட்சியினர் கடைப்பிடித்து வருகின்றனர்.

அதன்படி இன்று (ஜூலை30) தியாகிகள் தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. புதுச்சேரி-கடலூர் சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தியாகிகள் நினைவிடத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், பல்வேறு தொழிற்சங்கத்தினரும் தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.