ETV Bharat / bharat

கோவிட்-19 : இந்தியாவில் 68 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 78 ஆயிரத்து 524 நபர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 68 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

COVID-19
COVID-19
author img

By

Published : Oct 8, 2020, 10:58 AM IST

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 78 ஆயிரத்து 524 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 971 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கோவிட் - 19 தற்போதைய நிலவரம்

இதையடுத்து, நாட்டின் மொத்த நோய்த் தொற்று எண்ணிக்கை 68 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 68 லட்சத்து 35 ஆயிரத்து 655 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒன்பது லட்சத்து இரண்டாயிரத்து 425 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 58 லட்சத்து 27 ஆயிரத்து 704 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து 526 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனை நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (அக்.8) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 11 லட்சத்து 94 ஆயிரத்து 321 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை சுமார் எட்டு கோடியே 34 லட்சத்து 65 ஆயிரத்து 975 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிகார் தேர்தல் : நட்சத்திர பிரச்சாரகர்களின் எண்ணிக்கையைக் குறைத்த தேர்தல் ஆணையம்

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 78 ஆயிரத்து 524 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 971 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கோவிட் - 19 தற்போதைய நிலவரம்

இதையடுத்து, நாட்டின் மொத்த நோய்த் தொற்று எண்ணிக்கை 68 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 68 லட்சத்து 35 ஆயிரத்து 655 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒன்பது லட்சத்து இரண்டாயிரத்து 425 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 58 லட்சத்து 27 ஆயிரத்து 704 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து 526 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனை நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (அக்.8) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 11 லட்சத்து 94 ஆயிரத்து 321 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை சுமார் எட்டு கோடியே 34 லட்சத்து 65 ஆயிரத்து 975 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிகார் தேர்தல் : நட்சத்திர பிரச்சாரகர்களின் எண்ணிக்கையைக் குறைத்த தேர்தல் ஆணையம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.