ETV Bharat / bharat

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் - காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஜான்குமார் போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

author img

By

Published : Sep 28, 2019, 4:17 PM IST

ஜான்குமார்

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை அறிவித்தது. அதன்பிறகு ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்த நிலையில் காங்கிரஸ் கட்சி நாங்குநேரியில் ரூபி மனோகரனை வேட்பாளராக அறிவித்துள்ளது.

அதேபோன்று புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு ஜான்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு 10 பேர் விருப்பமனு அளித்தனர். இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கு கடுமையான போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு இறுதி வேட்பாளரை தேர்வு செய்வதில் தொடர்ச்சியான ஆலோசனையில் ஈடுபட்டனர். நேற்று மாலையே இந்து அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை அறிவித்தது. அதன்பிறகு ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்த நிலையில் காங்கிரஸ் கட்சி நாங்குநேரியில் ரூபி மனோகரனை வேட்பாளராக அறிவித்துள்ளது.

அதேபோன்று புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு ஜான்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு 10 பேர் விருப்பமனு அளித்தனர். இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கு கடுமையான போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு இறுதி வேட்பாளரை தேர்வு செய்வதில் தொடர்ச்சியான ஆலோசனையில் ஈடுபட்டனர். நேற்று மாலையே இந்து அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது.

Intro:புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான காங் வேட்பாளராக ஜான் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்...
Body:புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான காங் வேட்பாளராக ஜான் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்...

புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தல் வரும் 21ந்தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து இத்தொகுதி காங்.திமுக கூட்டணியில் காங்.கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே காங்.கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான வைத்திலிங்கம் இத்தொகுதியில் திறன்பட செயல்பட்டு வந்தார். பின்னர் அவர் புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து இந்த தொகுதி காலியானது. இந்நிலையில் கடும் போட்டிக்கிடையே புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் டில்லி சிறப்பு பிரதிநிதியுமான ஜான் குமார், காமராஜர் நகர் தொகுதியின் காங்.வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை கட்சியின் டில்லி மேலிடம் இன்று அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.. 54 வயதான இவர் பி பி ஏ பட்டதாரியாவர். புதுச்சேரி மாநில காங்.கட்சியின் பொதுச் செயலாளராகவும் இவர் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது....Conclusion:புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான காங் வேட்பாளராக ஜான் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்...
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.