பெங்களூரு நெலமங்கள சாலையில் சென்றுகொண்டிருந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ஏரியில் விழுந்தது. உடனே அருகில் இருந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் விரைந்து வந்து நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு காரில் இருந்த நான்கு பேரையும் மீட்டனர். ஆனால் அவர்கள் ஏரியில் இருந்த தண்ணீரில் மூச்சித் திணறி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து நான்கு பேரின் உடல்கள் உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் பெங்களூருவைச் சேர்ந்த சந்தோஷ், சுனில், மஞ்சுநாத், ராகவேந்திரா என்பது தெரியவந்துள்ளது. மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: போட்டி போட்டு வந்த பள்ளிப் பேருந்துகள் விபத்து - 15 மாணவர்கள் படுகாயம்