பிகாரில் கோபால்கஞ்சின் கட்கர்வா என்ற கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ஐந்து நாள்களாக வெள்ளத்தின் மத்தியில் தனது குடிசையின் கூரையில் சிக்கித் தவித்துவந்துள்ளார்.
இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வீடியோவில் உள்ள நபர் மீட்புப் படகைப் பார்த்தபின் தனது கைகளை அசைத்துள்ளார்.
நேபாளத்திலிருந்து தொடர்ச்சியாக நீர் வெளியேற்றப்படுவது பிகார் கோபால்கஞ்ச் கிராமங்களில் வெள்ள நிலைமை மோசமடைய வழிவகுந்துள்ளது.