ETV Bharat / bharat

காங்கிரஸ் கட்சியில் பிளவு? மூத்த தலைவரின் குறையை தீர்ப்பாரா சோனியா? - மூத்த தலைவரின் குறையை தீர்ப்பாரா சோனியா

டெல்லி: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக ராகுல் குற்றஞ்சாட்டிய நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆசாத் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து, அவரின் குறைகளை கேட்க கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ்
காங்கிரஸ்
author img

By

Published : Aug 26, 2020, 6:30 PM IST

காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர புதிய தலைவரை நியமிக்கக் கோரி செயற்குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியாவுக்கு கடிதம் எழுதினர். இதுகுறித்து விவாதிக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற்றது. இதற்கிடையே, தலைவர் பதவியிலிருந்து விலக சோனியா விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இதனிடையே, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஏழு மணி நேரமாக நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் பாஜகவுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என ராகுல் குற்றஞ்சாட்டியதாக முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் ட்வீட் செய்தார். இது பெரும் சர்ச்சையானது.

  • A section of media is wrongly attributing that, in CWC I told Shri Rahul Gandhi to prove that the letter written by us is in collusion with BJP-“let me make it very clear that Shri Rahul Gandhi has neither in CWC nor outside said that this letter was written at the behest of BJP"

    — Ghulam Nabi Azad (@ghulamnazad) August 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ராகுலின் குற்றச்சாட்டால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனிடையே, மூத்த தலைவர்களை சமாதானப்படுத்தும் நோக்கில் கட்சி தலைமை இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிருப்தியில் உள்ள மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத்தின் குறைகளை கேட்க சோனியா, ராகுல் அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடிதம் எழுதியர்கள் பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறார்கள் என்ற பொருள்படி தான் கூறவில்லை என கபில் சிபல், குலாம் நபி ஆசாத் ஆகியோரிடம் ராகுல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான ஆசாத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்குழு கூட்டத்தில் பலர் விமர்சித்திருந்தனர்.

குறிப்பாக, முன்னாள் மத்திய அமைச்சர்கள் மல்லிகார்ஜுன கார்கே, அம்பிகா சோனி ஆகியோர் கடிதம் எழுதியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: ஆந்திரா நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை எதிர்த்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர புதிய தலைவரை நியமிக்கக் கோரி செயற்குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியாவுக்கு கடிதம் எழுதினர். இதுகுறித்து விவாதிக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற்றது. இதற்கிடையே, தலைவர் பதவியிலிருந்து விலக சோனியா விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இதனிடையே, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஏழு மணி நேரமாக நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் பாஜகவுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என ராகுல் குற்றஞ்சாட்டியதாக முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் ட்வீட் செய்தார். இது பெரும் சர்ச்சையானது.

  • A section of media is wrongly attributing that, in CWC I told Shri Rahul Gandhi to prove that the letter written by us is in collusion with BJP-“let me make it very clear that Shri Rahul Gandhi has neither in CWC nor outside said that this letter was written at the behest of BJP"

    — Ghulam Nabi Azad (@ghulamnazad) August 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ராகுலின் குற்றச்சாட்டால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனிடையே, மூத்த தலைவர்களை சமாதானப்படுத்தும் நோக்கில் கட்சி தலைமை இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிருப்தியில் உள்ள மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத்தின் குறைகளை கேட்க சோனியா, ராகுல் அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடிதம் எழுதியர்கள் பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறார்கள் என்ற பொருள்படி தான் கூறவில்லை என கபில் சிபல், குலாம் நபி ஆசாத் ஆகியோரிடம் ராகுல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான ஆசாத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்குழு கூட்டத்தில் பலர் விமர்சித்திருந்தனர்.

குறிப்பாக, முன்னாள் மத்திய அமைச்சர்கள் மல்லிகார்ஜுன கார்கே, அம்பிகா சோனி ஆகியோர் கடிதம் எழுதியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: ஆந்திரா நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை எதிர்த்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.