ETV Bharat / bharat

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்: உ.பி.யை தொடர்ந்து கேரளாவிலும் பரவல்

author img

By

Published : Jul 22, 2022, 1:46 PM IST

உத்தரப்பிரதேச மாநிலத்தை தொடர்ந்து கேரளாவிலும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பதிவாகியுள்ளது.

african-swine-fever-reported-in-keralas-wayanad
african-swine-fever-reported-in-keralas-wayanad

திருவனந்தபுரம்: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று (ஜூலை 20) 140 பன்றிகள் திடீரென உயிரிழந்தன. இந்த பன்றிகளின் ரத்த மாதிரிகளை போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்குகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்ததில், ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கேரளாவின் வயநாடு மாவட்டம் மானந்தவாடியில் உள்ள இரண்டு பன்றி பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பதிவாகியுள்ளது. இதுகுறித்து மாநில கால்நடை பராமரிப்புதுறை அலுவலர்கள் தரப்பில், மானந்தவாடியில் உள்ள பண்ணையின் பன்றிகள் அனைத்தும் நேற்று உயிரிழந்தன. இதுகுறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்து, பன்றிகளின் மாதிரிகளை சேகரித்து, போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்குகள் ஆய்வகத்திற்கு அனுப்பினோம். அதில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதியானது. இதேபோல அதோ பகுதியில் உள்ள மற்றொரு பண்ணையில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பண்ணையில் உள்ள 300 பன்றிகளையும் கொலை செய்ய முடிவெடுத்துள்ளோம். இந்த மாவட்டத்திலுள்ள அனைத்து பண்ணைகளிலும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டுவருகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: உ.பி.யில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவல்: 140 பன்றிகள் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று (ஜூலை 20) 140 பன்றிகள் திடீரென உயிரிழந்தன. இந்த பன்றிகளின் ரத்த மாதிரிகளை போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்குகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்ததில், ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கேரளாவின் வயநாடு மாவட்டம் மானந்தவாடியில் உள்ள இரண்டு பன்றி பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பதிவாகியுள்ளது. இதுகுறித்து மாநில கால்நடை பராமரிப்புதுறை அலுவலர்கள் தரப்பில், மானந்தவாடியில் உள்ள பண்ணையின் பன்றிகள் அனைத்தும் நேற்று உயிரிழந்தன. இதுகுறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்து, பன்றிகளின் மாதிரிகளை சேகரித்து, போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்குகள் ஆய்வகத்திற்கு அனுப்பினோம். அதில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதியானது. இதேபோல அதோ பகுதியில் உள்ள மற்றொரு பண்ணையில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பண்ணையில் உள்ள 300 பன்றிகளையும் கொலை செய்ய முடிவெடுத்துள்ளோம். இந்த மாவட்டத்திலுள்ள அனைத்து பண்ணைகளிலும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டுவருகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: உ.பி.யில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவல்: 140 பன்றிகள் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.