ETV Bharat / bharat

Delhi NDA meet: டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டம் - 38 கட்சிகள் பங்கேற்பு!

author img

By

Published : Jul 18, 2023, 11:19 AM IST

Updated : Jul 18, 2023, 2:00 PM IST

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான இக்கூட்டத்தில் 38 கட்சிகள் பங்கேற்க உள்ளன.

Delhi NDA meet: டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டம் - 38 கட்சிகள் பங்கேற்பு!
Delhi NDA meet: டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டம் - 38 கட்சிகள் பங்கேற்பு!

டெல்லி: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக அரசை தோற்கடிக்க எதிர்கட்சித் தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பாஜகவிற்கு எதிராக வலுவான எதிரணியை உருவாக்க பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் வேலைகள் நடந்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூன் 23ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் தேசிய அளவிலான எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம், கர்நாடக மாநிலம் பெங்களுருவில் நேற்று (ஜூலை 17) தொடங்கியது.

இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இரண்டாவது நாளாக இன்றும் (ஜூலை 18) எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த பாஜக தலைவர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இதில் கலந்து கொள்ள பாஜகவின் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் 38 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். அதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக தரப்பில் எம்எல்ஏ ஜி.கே.மணி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான் பாண்டியன் மற்றும் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

அண்மையில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக பதவியேற்ற அஜித் பவார், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர். அதேபோல், நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா, ஜேஜேபி, சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

மேலும், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியும் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளது. சிராக் பாஸ்வான் நேற்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து பேசினார். அதன் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் சிராக் பாஸ்வான் இணைந்தது உறுதியானது.

எதிர்கட்சிகள் ஓரணியில் தீவிரமாக செயல்பட்டு வருவதால், அவர்களது முயற்சியை முறியடித்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. இதற்காக நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு கட்சிகளுடன் கைகோர்க்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி, எதிர்கட்சிகளுக்கு எதிரான வியூகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: Bengaluru opposition meeting: இன்றைய எதிர்கட்சிகள் கூட்டத்தில் விவாதிக்க உள்ள 6 முக்கிய விஷயங்கள்!

டெல்லி: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக அரசை தோற்கடிக்க எதிர்கட்சித் தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பாஜகவிற்கு எதிராக வலுவான எதிரணியை உருவாக்க பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் வேலைகள் நடந்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூன் 23ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் தேசிய அளவிலான எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம், கர்நாடக மாநிலம் பெங்களுருவில் நேற்று (ஜூலை 17) தொடங்கியது.

இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இரண்டாவது நாளாக இன்றும் (ஜூலை 18) எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த பாஜக தலைவர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இதில் கலந்து கொள்ள பாஜகவின் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் 38 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். அதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக தரப்பில் எம்எல்ஏ ஜி.கே.மணி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான் பாண்டியன் மற்றும் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

அண்மையில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக பதவியேற்ற அஜித் பவார், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர். அதேபோல், நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா, ஜேஜேபி, சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

மேலும், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியும் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளது. சிராக் பாஸ்வான் நேற்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து பேசினார். அதன் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் சிராக் பாஸ்வான் இணைந்தது உறுதியானது.

எதிர்கட்சிகள் ஓரணியில் தீவிரமாக செயல்பட்டு வருவதால், அவர்களது முயற்சியை முறியடித்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. இதற்காக நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு கட்சிகளுடன் கைகோர்க்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி, எதிர்கட்சிகளுக்கு எதிரான வியூகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: Bengaluru opposition meeting: இன்றைய எதிர்கட்சிகள் கூட்டத்தில் விவாதிக்க உள்ள 6 முக்கிய விஷயங்கள்!

Last Updated : Jul 18, 2023, 2:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.