சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இரண்டாம் கட்ட மறுசீரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் புறநகர் ரயில் தற்காலிகமாக இயக்கப்படாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், இந்த புறநகர் ரயில் சேவைகள் தற்காலிக மாற்றம் பெற்று, ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து பல்லாவரம் ஸ்டேஷன் வரை மட்டுமே இயக்கப்படும் எனவும், அதேபோல் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் புறநகர் ரயில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை கூடுவாஞ்சேரியில் இருந்து செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.