ETV Bharat / snippets

பழைய வண்ணாரப்பேட்டையில் செருப்பு கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 6:52 PM IST

பெட்ரோல் குண்டு
பெட்ரோல் குண்டு (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணிகடைகள், காலணி உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், என் என் கார்டன் பகுதியில் சாகுல் அமீது என்பவருக்குச் சொந்தமாக இயங்கி வரும் ஐ லுக் என்ற செருப்புக் கடையில் இன்று பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.

சாகுல் அமீது கடை நேற்றிலிருந்து பூட்டியே இருந்த நிலையில், இன்று பூட்டிய கடையின் ஷட்டரில் பெட்ரோல் குண்டை மர்ம நபர்கள் வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். இவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவ இடத்தில் வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் சதாசிவம் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பு வண்ணாரப்பேட்டை பகுதியில் மாமூல் கேட்டு வியாபாரிகளை ரவுடிகள் வெட்டிய சம்பவம் அரங்கேறிய நிலையில், தற்போது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவமானது வியாபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணிகடைகள், காலணி உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், என் என் கார்டன் பகுதியில் சாகுல் அமீது என்பவருக்குச் சொந்தமாக இயங்கி வரும் ஐ லுக் என்ற செருப்புக் கடையில் இன்று பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.

சாகுல் அமீது கடை நேற்றிலிருந்து பூட்டியே இருந்த நிலையில், இன்று பூட்டிய கடையின் ஷட்டரில் பெட்ரோல் குண்டை மர்ம நபர்கள் வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். இவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவ இடத்தில் வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் சதாசிவம் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பு வண்ணாரப்பேட்டை பகுதியில் மாமூல் கேட்டு வியாபாரிகளை ரவுடிகள் வெட்டிய சம்பவம் அரங்கேறிய நிலையில், தற்போது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவமானது வியாபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.