ETV Bharat / state

'முதலும் நீ முடிவும் நீ' - காதலியுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட இளைஞர் சடலமாக மீட்பு! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 10:49 PM IST

Mayiladuthurai youth death: முதலும் நீ முடிவும் நீ என்று சமூக வலைதளப் பக்கத்தில் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மாயமான இளைஞர் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மயிலாடுதுறை இளைஞர் உயிரிழப்பு
மயிலாடுதுறை இளைஞர் உயிரிழப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் பரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் பானுஸ்ரீதர் (வயது 21). கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற இவர் சென்னையில் கம்யூட்டர் கோர்ஸ் படித்து வந்த நிலையில் விடுமுறைக்காக சென்னையில் இருந்து தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வேப்பஞ்சேரி என்ற பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்ற பானுஸ்ரீதர் வீடு திரும்பாததால், அவரது தாயார் கஸ்தூரி பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பானுஸ்ரீதர் வேப்பஞ்சேரி பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடற்கரை வழியே புதுப்பேட்டை வரை நடந்து சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின் அவர் எங்கு சென்றார் என தெரியாத நிலையில் போலீசார் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று மாலை சந்திரபாடி கடற்கரையில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த சந்திரபாடி மீனவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தரங்கம்பாடி கடலோர காவல் நிலையம் மற்றும் பொறையார் போலீசார் உயிரிழந்துள்ளது பானுஸ்ரீதர் என கண்டறிந்துள்ளனர்.

பின்னர், போலீசார் பானுஸ்ரீதரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் 174 தற்கொலை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பானுஸ்ரீதரின் உடலில் காயங்கள் உள்ளதாகவும், இறப்பில் சந்தேகம் உள்ளதால் இன்று காலை பிரேத பரிசோதனை செய்வதை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனக் கூறி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, பானுஸ்ரீதர் திருக்கடையூர் பகுதியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியை காதலித்து வந்ததாகவும் அந்தப் பெண் பானுஸ்ரீதரை நிராகரித்து வேறு ஒருவரை காதலித்ததால் இளைஞர் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. மேலும், பானுஸ்ரீதர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'முதலும் நீ முடிவும் நீ' என்று காதலியுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு வேப்பஞ்சேரி பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர், அவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும், பெண்ணின் உறவினர்கள் கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளதால் மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை டிஎஸ்பி (பொறுப்பு) கலைக்கதிரவன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனை முடிவு அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பானுஸ்ரீதர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: காரைக்கால் கடலில் மூழ்கி கல்லூரிகள் மாணவர்கள் உயிரிழப்பு - விடுமுறை கொண்டாட்டத்தில் சோகம்!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் பரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் பானுஸ்ரீதர் (வயது 21). கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற இவர் சென்னையில் கம்யூட்டர் கோர்ஸ் படித்து வந்த நிலையில் விடுமுறைக்காக சென்னையில் இருந்து தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வேப்பஞ்சேரி என்ற பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்ற பானுஸ்ரீதர் வீடு திரும்பாததால், அவரது தாயார் கஸ்தூரி பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பானுஸ்ரீதர் வேப்பஞ்சேரி பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடற்கரை வழியே புதுப்பேட்டை வரை நடந்து சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின் அவர் எங்கு சென்றார் என தெரியாத நிலையில் போலீசார் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று மாலை சந்திரபாடி கடற்கரையில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த சந்திரபாடி மீனவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தரங்கம்பாடி கடலோர காவல் நிலையம் மற்றும் பொறையார் போலீசார் உயிரிழந்துள்ளது பானுஸ்ரீதர் என கண்டறிந்துள்ளனர்.

பின்னர், போலீசார் பானுஸ்ரீதரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் 174 தற்கொலை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பானுஸ்ரீதரின் உடலில் காயங்கள் உள்ளதாகவும், இறப்பில் சந்தேகம் உள்ளதால் இன்று காலை பிரேத பரிசோதனை செய்வதை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனக் கூறி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, பானுஸ்ரீதர் திருக்கடையூர் பகுதியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியை காதலித்து வந்ததாகவும் அந்தப் பெண் பானுஸ்ரீதரை நிராகரித்து வேறு ஒருவரை காதலித்ததால் இளைஞர் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. மேலும், பானுஸ்ரீதர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'முதலும் நீ முடிவும் நீ' என்று காதலியுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு வேப்பஞ்சேரி பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர், அவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும், பெண்ணின் உறவினர்கள் கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளதால் மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை டிஎஸ்பி (பொறுப்பு) கலைக்கதிரவன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனை முடிவு அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பானுஸ்ரீதர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: காரைக்கால் கடலில் மூழ்கி கல்லூரிகள் மாணவர்கள் உயிரிழப்பு - விடுமுறை கொண்டாட்டத்தில் சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.