ETV Bharat / state

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: "பாஜகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்" - முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ! - Vikravandi by election

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 1:44 PM IST

MK Stalin campaigned for Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து, சமூக நீதிக்கு எதிராக செயல்படும் பாஜகவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சார வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சிகளில் தீவிர பிரச்சாரம் செய்துவரும் நிலையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "வரும் ஜூலை 10 நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், திமுகவின் ஆற்றல்மிக்க வேட்பாளர் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகத்துக்கு, வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியா கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் அன்னியூர் சிவாவை உங்களுக்கு தனியாக அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. உங்கள் மண்ணின் மைந்தர், மக்களோடு மக்களாக மக்கள் பணியாற்றும் மக்கள் தொண்டர்தான். 1986ஆம் ஆண்டு முதல், அன்னியூர் சிவாவை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தடம் மாறாத, நிறம் மாறாத கருணாநிதியின் உடன்பிறப்புகளில் அவரும் ஒருவர். தலைவர் கருணாநிதியின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், "தன்னால் கட்சிக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே சிந்திக்கும் ரத்த நாளங்களில் ஒருவர்.

விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றிய இளைஞர் அணித் துணை அமைப்பாளர், ஒன்றுபட்ட மாவட்டத் தலைமைப் பொதுக்குழு உறுப்பினர், அன்னியூர் கூட்டுறவு விவசாய வங்கித் தலைவர், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். தற்போது விவசாயத் தொழிலாளர் அணியின் மாநிலச் செயலாளராக பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட அன்னியூர் சிவாவை, விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பி வையுங்கள் என்று அன்போடு நான் கேட்டுக் கொள்கிறேன். அன்போடு மட்டுமல்ல.. உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், கடந்த மூன்றாண்டு காலத்தில் செய்து தரப்பட்டிருக்கும் நலத்திட்டங்களை விவரித்து சொல்ல வேண்டும் என்றால் நேரம் போதாது.

தற்போது, கட்சி வளர்த்த கொள்கைக் குன்றான ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. 1987ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில், துப்பாக்கிச்சூட்டில் பலியான சமூகநீதிப் போராளிகளுக்கான நினைவகம் கட்டிக் கொண்டிருக்கிறோம். இவை இரண்டையும் சீக்கிரமே விழுப்புரத்தில் நான் திறந்து வைக்க இருக்கிறேன்.

கட்சித் துணைப் பொதுச்செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி, மறைந்த சட்டமன்ற உறுப்பினரான புகழேந்தி என அனைவரும் இந்த மாவட்டத்துக்கும், தொகுதிக்கும் ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். எல்லா மக்களுக்கும் பொதுவான மக்கள் நலத்திட்டங்கள் தொடர, உங்களின் ஆதரவை வேண்டி நிற்கிறோம். சமூகநீதிக்கு எதிரான பாஜக கூட்டணியை தோற்கடிப்பது மூலமாக, சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்ளுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்" என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: யார் இந்த அன்னியூர் சிவா? முதல்முறை தேர்தலில் களமிறக்கும் திமுக..!

சென்னை: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சிகளில் தீவிர பிரச்சாரம் செய்துவரும் நிலையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "வரும் ஜூலை 10 நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், திமுகவின் ஆற்றல்மிக்க வேட்பாளர் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகத்துக்கு, வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியா கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் அன்னியூர் சிவாவை உங்களுக்கு தனியாக அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. உங்கள் மண்ணின் மைந்தர், மக்களோடு மக்களாக மக்கள் பணியாற்றும் மக்கள் தொண்டர்தான். 1986ஆம் ஆண்டு முதல், அன்னியூர் சிவாவை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தடம் மாறாத, நிறம் மாறாத கருணாநிதியின் உடன்பிறப்புகளில் அவரும் ஒருவர். தலைவர் கருணாநிதியின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், "தன்னால் கட்சிக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே சிந்திக்கும் ரத்த நாளங்களில் ஒருவர்.

விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றிய இளைஞர் அணித் துணை அமைப்பாளர், ஒன்றுபட்ட மாவட்டத் தலைமைப் பொதுக்குழு உறுப்பினர், அன்னியூர் கூட்டுறவு விவசாய வங்கித் தலைவர், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். தற்போது விவசாயத் தொழிலாளர் அணியின் மாநிலச் செயலாளராக பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட அன்னியூர் சிவாவை, விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பி வையுங்கள் என்று அன்போடு நான் கேட்டுக் கொள்கிறேன். அன்போடு மட்டுமல்ல.. உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், கடந்த மூன்றாண்டு காலத்தில் செய்து தரப்பட்டிருக்கும் நலத்திட்டங்களை விவரித்து சொல்ல வேண்டும் என்றால் நேரம் போதாது.

தற்போது, கட்சி வளர்த்த கொள்கைக் குன்றான ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. 1987ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில், துப்பாக்கிச்சூட்டில் பலியான சமூகநீதிப் போராளிகளுக்கான நினைவகம் கட்டிக் கொண்டிருக்கிறோம். இவை இரண்டையும் சீக்கிரமே விழுப்புரத்தில் நான் திறந்து வைக்க இருக்கிறேன்.

கட்சித் துணைப் பொதுச்செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி, மறைந்த சட்டமன்ற உறுப்பினரான புகழேந்தி என அனைவரும் இந்த மாவட்டத்துக்கும், தொகுதிக்கும் ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். எல்லா மக்களுக்கும் பொதுவான மக்கள் நலத்திட்டங்கள் தொடர, உங்களின் ஆதரவை வேண்டி நிற்கிறோம். சமூகநீதிக்கு எதிரான பாஜக கூட்டணியை தோற்கடிப்பது மூலமாக, சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்ளுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்" என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: யார் இந்த அன்னியூர் சிவா? முதல்முறை தேர்தலில் களமிறக்கும் திமுக..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.