ETV Bharat / state

தஞ்சை கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒரு சிறுவன் உட்பட 2 பேர் கைது - Thanjavur gang rape case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2024, 3:57 PM IST

Thanjavur gang-rape case accused: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோப்புப் படம்
கோப்புப் படம் (credit - ETV Bharat Tamil Nadu)

ஒரத்தநாடு: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிலரால் கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டார். இது குறித்து ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் மற்றும் 17 வயதுடைய சிறுவன் என மொத்தம் 4 பேரை கைது செய்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக அரசியல் கட்சிகள், வணிகர்கள் உட்பட பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அப்போது, இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து நபர்கள் மீதும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிக்கு தண்டனை பெற்று தரவேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் பாப்பாநாடு பகுதியை சேர்ந்த 20 வயது மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய இரண்டு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தஞ்சாவூர் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 4 வாலிபர்கள் மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் 2 பேர் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: நோ பார்க்கிங்கில் இருக்கும் வண்டிகளுக்கு குறி.. பகீர் வாக்குமூலம்.. சென்னையில் சீரியல் திருடன் கைது!

ஒரத்தநாடு: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிலரால் கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டார். இது குறித்து ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் மற்றும் 17 வயதுடைய சிறுவன் என மொத்தம் 4 பேரை கைது செய்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக அரசியல் கட்சிகள், வணிகர்கள் உட்பட பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அப்போது, இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து நபர்கள் மீதும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிக்கு தண்டனை பெற்று தரவேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் பாப்பாநாடு பகுதியை சேர்ந்த 20 வயது மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய இரண்டு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தஞ்சாவூர் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 4 வாலிபர்கள் மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் 2 பேர் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: நோ பார்க்கிங்கில் இருக்கும் வண்டிகளுக்கு குறி.. பகீர் வாக்குமூலம்.. சென்னையில் சீரியல் திருடன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.