ETV Bharat / state

ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.2 லட்சம்.. திருப்பூர் கும்பல் கோயம்பேட்டில் சிக்கியது எப்படி? - Money doubling scam

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 17, 2024, 5:37 PM IST

Money doubling scam in Chennai: சென்னை கோயம்பேட்டில் இரட்டிப்பாக பணம் தருவதாகக் கூறி ரூபாய் நோட்டுகளுக்கு இடையே வெள்ளைத்தாள்களை வைத்து நூதன முறையில் மோசடி செய்ய முயன்ற இரண்டு பேரஒ குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பணம்
கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னையில் இரட்டிப்பு பணம் கொடுப்பதாகக் கூறி நூதன முறையில் பொதுமக்களை மர்ம கும்பல் மோசடி செய்வதாக குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், ஆய்வாளர் சாகுல் ஹமீது தலைமையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே, இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி மோசடி செய்யும் கும்பல் கோயம்பேட்டு பேருந்து நிலையம் பகுதியில் 10 லட்சம் ரூபாய் பணத்துடன் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரை மடக்கி சோதனை செய்தனர்.

விசாரணையில், அவர்களிடம் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. அவற்றைக் கைபற்றி சோதனை செய்தபோது, இரண்டு ரூபாய் நோட்டுகளுக்கிடையே வெள்ளை நிற தாள்கள் வைத்து மோசடி செய்ய முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அதனை 5 லட்சம் ரூபாய் கொண்டு வரும் ஒருவரிடம், ரூ.10 லட்சம் எனக் கூறி ஏமாற்ற காத்திருந்ததும் தெரியவந்தது.

அதன் பின்னர், இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பிடிபட்டவர்கள் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிக் (22) மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகவேல் (52) என்பது தெரியவந்தது. பின்னர், அவர்களிடமிருந்து 48 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் ஏமாற்ற வைத்திருந்த வெள்ளைத்தாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், இருவரும் இணைந்து பல்வேறு நபர்களிடம் பணத்தை இரட்டிப்பாக்கிக் கொடுப்பதாகக் கூறி நூதன முறையில் மோசடி செய்து வந்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, பிடிபட்ட இருவரையும் கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நகை அடகு கடைக்காரரிடம் ரூ.7.5 லட்சம் மோசடி: தனியார் வங்கி மேலாளர் உட்பட 2 பேர் கைது!

சென்னை: சென்னையில் இரட்டிப்பு பணம் கொடுப்பதாகக் கூறி நூதன முறையில் பொதுமக்களை மர்ம கும்பல் மோசடி செய்வதாக குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், ஆய்வாளர் சாகுல் ஹமீது தலைமையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே, இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி மோசடி செய்யும் கும்பல் கோயம்பேட்டு பேருந்து நிலையம் பகுதியில் 10 லட்சம் ரூபாய் பணத்துடன் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரை மடக்கி சோதனை செய்தனர்.

விசாரணையில், அவர்களிடம் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. அவற்றைக் கைபற்றி சோதனை செய்தபோது, இரண்டு ரூபாய் நோட்டுகளுக்கிடையே வெள்ளை நிற தாள்கள் வைத்து மோசடி செய்ய முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அதனை 5 லட்சம் ரூபாய் கொண்டு வரும் ஒருவரிடம், ரூ.10 லட்சம் எனக் கூறி ஏமாற்ற காத்திருந்ததும் தெரியவந்தது.

அதன் பின்னர், இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பிடிபட்டவர்கள் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிக் (22) மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகவேல் (52) என்பது தெரியவந்தது. பின்னர், அவர்களிடமிருந்து 48 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் ஏமாற்ற வைத்திருந்த வெள்ளைத்தாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், இருவரும் இணைந்து பல்வேறு நபர்களிடம் பணத்தை இரட்டிப்பாக்கிக் கொடுப்பதாகக் கூறி நூதன முறையில் மோசடி செய்து வந்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, பிடிபட்ட இருவரையும் கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நகை அடகு கடைக்காரரிடம் ரூ.7.5 லட்சம் மோசடி: தனியார் வங்கி மேலாளர் உட்பட 2 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.