ETV Bharat / state

"கள்ளச்சாராயத்தில் 8.6 - 29.7% மெத்தனால் கலந்துள்ளது" - கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து ஐகோர்ட்டில் அரசு பகீர் தகவல்! - KALLAKURICHI ILLEGAL LIQUOR CASE

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 3, 2024, 3:37 PM IST

Kallakurichi Illegal Liquor Issue: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தில் 8.6 முதல் 29.7 சதவீதம் மெத்தனால் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், "சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் மாவட்ட ஆட்சியர் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு நேரில் சென்று நடவடிக்கை எடுத்தார். மேலும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வருவாய்த் துறையினரை உடனடியாக விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கபட்டுள்ளது. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், சிகிச்சை பெற்று வருவோர்க்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணமும் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி காவல்துறை மூன்று வழக்குகள் பதிவு செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், மதுவிலக்கு ஏடிஜிபி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 9 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து அறிக்கை அளிக்க ஆணையத்திடம் கோரப்பட்டுள்ளது.

இதுவரை 132 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிபிசிஐடியின் 6 குழுக்கள் வழக்கை விசாரித்து வருகின்றன. விசாரணை விரிவாகவும், துரிதமாகவும் நடைபெற்று வருகிறது. தமிழக டிஜிபி தலைமையில் அனைத்து உயர் காவல்துறை அதிகாரிகளும் தொடர்ந்து விசாரணையை கண்காணித்து வருகின்றனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நடைபெற்ற கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு சம்பவத்தில், கள்ளச்சாராயத்தில் 99 சதவீதம் மெத்தனால் இருந்தது கண்டறியப்பட்டது. தற்போது கள்ளக்குறிச்சியில் கைப்பற்றப்பட்ட கள்ளச்சாராயத்தில் 8.6 முதல் 29.7 வரை மெத்தனால் கலந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

'சிபிஐ விசாரணை தேவையில்லை': தொழிற்சாலைகளுக்கு வழங்கிவரும் மெத்தனால் கண்காணிக்கபடுகிறது. மேலும், கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகின்றது. இந்த குற்றங்களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

மாநில அரசு இந்த சம்பவம் குறித்து கவனமாக விசாரித்து வருகிறது. தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மாநில காவல் துறை விசாரித்து வரும் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அவசியம் இல்லை.

விசாரணையில் முன்னேற்றம் இல்லாத வழக்குகளை மட்டுமே சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியும். இந்த வழக்கில் 10க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்று இரண்டு வாரங்கள் ஆன நிலையில் விசாரணை சரியான முறையில் நடைபெற்று வருகிறது.

மேலும், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கள்ளச்சாராய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை அதிகரித்து வருகிறது. இந்த சட்டத்தில் ஜாமீன் வழங்குவதற்கு கடுமையான நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தமிழக ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தவுடன் சட்டத்திருத்தம் அமலுக்கு வரும்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இதுவரை 65 பேர் மரணம் அடைந்துள்ளனர். 145 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். உரிய முறையில் விசாரணை நடைபெற்று வருவதால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: "நீட் தேவையற்றது; கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுக" - த.வெ.க விழாவில் விஜய் அதிரடி பேச்சு - vijay on neet exam

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், "சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் மாவட்ட ஆட்சியர் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு நேரில் சென்று நடவடிக்கை எடுத்தார். மேலும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வருவாய்த் துறையினரை உடனடியாக விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கபட்டுள்ளது. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், சிகிச்சை பெற்று வருவோர்க்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணமும் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி காவல்துறை மூன்று வழக்குகள் பதிவு செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், மதுவிலக்கு ஏடிஜிபி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 9 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து அறிக்கை அளிக்க ஆணையத்திடம் கோரப்பட்டுள்ளது.

இதுவரை 132 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிபிசிஐடியின் 6 குழுக்கள் வழக்கை விசாரித்து வருகின்றன. விசாரணை விரிவாகவும், துரிதமாகவும் நடைபெற்று வருகிறது. தமிழக டிஜிபி தலைமையில் அனைத்து உயர் காவல்துறை அதிகாரிகளும் தொடர்ந்து விசாரணையை கண்காணித்து வருகின்றனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நடைபெற்ற கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு சம்பவத்தில், கள்ளச்சாராயத்தில் 99 சதவீதம் மெத்தனால் இருந்தது கண்டறியப்பட்டது. தற்போது கள்ளக்குறிச்சியில் கைப்பற்றப்பட்ட கள்ளச்சாராயத்தில் 8.6 முதல் 29.7 வரை மெத்தனால் கலந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

'சிபிஐ விசாரணை தேவையில்லை': தொழிற்சாலைகளுக்கு வழங்கிவரும் மெத்தனால் கண்காணிக்கபடுகிறது. மேலும், கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகின்றது. இந்த குற்றங்களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

மாநில அரசு இந்த சம்பவம் குறித்து கவனமாக விசாரித்து வருகிறது. தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மாநில காவல் துறை விசாரித்து வரும் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அவசியம் இல்லை.

விசாரணையில் முன்னேற்றம் இல்லாத வழக்குகளை மட்டுமே சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியும். இந்த வழக்கில் 10க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்று இரண்டு வாரங்கள் ஆன நிலையில் விசாரணை சரியான முறையில் நடைபெற்று வருகிறது.

மேலும், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கள்ளச்சாராய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை அதிகரித்து வருகிறது. இந்த சட்டத்தில் ஜாமீன் வழங்குவதற்கு கடுமையான நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தமிழக ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தவுடன் சட்டத்திருத்தம் அமலுக்கு வரும்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இதுவரை 65 பேர் மரணம் அடைந்துள்ளனர். 145 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். உரிய முறையில் விசாரணை நடைபெற்று வருவதால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: "நீட் தேவையற்றது; கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுக" - த.வெ.க விழாவில் விஜய் அதிரடி பேச்சு - vijay on neet exam

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.